Posts

Showing posts from June, 2018

வேலுநாச்சியார்!-2

அதில் ஒருவர் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் பெரிய மருது! மற்றொருவர் அண்ணன் எவ்வழியோ அவ்வழியே அறவழி- என்ற சின்ன மருது! இரு மருதும் நாச்சியாருக்கு கிடைத்த விருதுகள்! காலைக் கதிரு பொக்கிஷ குதிரு இவர்கள்!! உடன் இருந்தால் உலகை விலை பேசலாம்... வீரத்திலும் தீரத்திலும் அலை வீசலாம்! பயமில்லா விலாசம் எங்கும் எதிலும் இடதும் வலதுமாய் வலம் வரும்-அவளது சுவாசம்... அந்த சுவாசத்தின் விசுவாசத்தால் தான் பின்னொரு நாள் மன்னர் ஆனார்கள்! அது தனிக் கதை... படை புறப்பட்டது தடை உடைக்கப்பட்டு மூன்றாய் பிரிந்தனர் முப்படையாய் பறந்தனர் திருப்பத்தூருக்கு ஒன்று அதில் வெற்றி கண்டு காளையர் கோவிலுக்கு ஒன்று - அங்கும் தோல்வி யில்லை! மற்றொன்று சிவகங்கை க்கு மக்கள் கிளர்ச்சி வுடன் அதீத முயற்சி வுடன் சீக்கிரத்தில் கரம் பற்றியது - வெற்றி சுரம் முற்றியது! நவாப் படைகள் நசிந்து போனது பரங்கியர் படை பறந்து போனது சிவகங்கை யை மறந்து போனது நாச்சியாரை நினைந்து போனது! இவள் பெண் அல்ல வேங்கை! இத்தனை நாட்கள் பதுங்கியது இந்த பாய்ச்சலுக்குத் தானா! ஊரே தகைச்சு போனது ஒரே பேச்சாய் போ...

வேலுநாச்சியார்! - 1

வேலு நாச்சி அவ வீர சாட்சி! மறவர் பிறப்பு-அவள் மறவாத இருப்பு! வெள்ளையேன் கண்ணீல்- விரல் விட்டு ஆட்டியவர்களில் அவ விரலும் ஒன்று! வடக்கே ஜான்சி ராணிக்கு முன்னே தெற்கே பேன்சி(பேமஸ்) ராணியாய் ஆனவள்! வீர தமிழச்சி விவேகம் அவகட்சி! நயவஞ்சகன் நவாப்மூலம் நிர்கதியாய் ஆனவள் நடுத்தெருவிற்கு வந்தவள் - பின் அவன் குல நடுங்கச் செய்தவள்... நெற்குதிராய் நிமிர்தவள்! சிவகங்கை சீமைக்கு சீராய் புகுந்த மகிமை கணவர் இறந்ததும் போராய் எழுந்த பெருமை! உடன்கட்டை ஏறாது உடல் சுட்டே குறைக்காது நெஞ்சுக்குழி ஈரம் மறையாது அவ ராணி ஆன வீரம் மறக்காது! இரமாநாத புரம் ஜில்லாவில் பிறந்ததோர் நன்நாளில் சக்கந்தி கிராமத்தில் சக்தி வாய்ந்த நாமத்தில் வேலுநாச்சி பிறந்தார் நூற்றாண்டை கடந்து சொல்லாட்சி யாய் திகழ்ந்தார்! விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி இவ பிறப்பிற்கான அதிபதி! முத்தாத்தாள் நாச்சியார் இவளைப் பெற்றவள் மனமறிய கற்றவள் இனமறிய கற்பித்தவள் இளமங்கையாய்-இன வேங்கை யாய் பிரசவித்தவள்... கைவீச்சு கண்வீச்சு கத்திவீச்சு புத்திவீச்சு எல்லாமே அவளிடம் முழுவீச்சில் தான்! நேர்முக பேச...