Posts

Showing posts from November, 2020

வருத்தங்களுடன்.... நான்!

பன்னிரு தினங்கள் கண் நீர் கனைகளாய்... ஒரு டஜன் நாட்களும் கவலைக் குகையில் மனங் கலங்கிய நாட்களாய் தொடர் போராட்டமாய் போக்கு காட்டிய நகரா மணித் துளிகள் அகலா மரண வலிகள்! வேதனை யின் வேகத்தில் வேகும் தீயில்... வெந்துதான் போனது மனம்- நொந்துதான் போனது! துயரத் துரத்தலில் தூங்கா விழிகள் துடி துடித்து படப் படத்து குறுகி போனது- மனம் கருகிப் போனது! வேறு யோசிப்பின்றி ஏதும் வாசிப்பின்றி இறை யாசிப் பன்றி... ஏதும் நாடாவது போனது அத்துனையும் கடந்தும் போனது! விதி வலியது! வீண் தர்க்கமில்லை மரணப் படுக்கையில் மகனைப் பார்த்து, பார்த்து... மரத்துப் போனது மற்றது யாவும்  மறந்து போனது! தெளியவே இத்தனை நாட்கள் தெரிவிக்க முடியவில்லை! இரு சக்கர வாகன விபத்தில் இடது காலில் இரு இடத்திலும் இடது முகவாயில் இரு இடத்திலும் மோதிப் பார்த்த தில் உடைந்தது வெறும் எலும்புகள் மட்டுமல்ல... எங்களது மனமும் தைரியமுந் தான்! மூன்று அறுவை சிகிச்சைக்கு பின் ஆறுதலாய் சில நிகழ்வுகள் ஆயினும் இன்னும் குணமாகவில்லை முழுவதுமாய் சுகமாகவில்லை... எங்களது மனநிலைப் போலவே அவனது உடல் நிலையும்! அதிக இரத்த இழப்பும் இரத்த நாண  சேதமும் பேரிழப்பு இல்...

தீ ஆவளி! வாழ்த்துகள்

இல்லந் தோறும் தீபம் ஏறட்டும் ஒளி பரவட்டும் இருள் அகலட்டும் இன்னல்கள் விலகட்டும் இன்னும் பிற... நல்லதாய் எண்ணங்கள் வலுவாகட்டும் மனம் சிறக்க வாழ பழகு வாழ்க்கை எளிது! வார்த்தை பழகு வாழ்வது எளிது! எதிலும்- குறை காணாது நிறை கானுங்கள்- அதில் இறை கானுங்கள் இறை காண குரு நாடுங்கள்! நிதானம் நிறை கொடுக்கும் பொறுமை பொக்கிசமாய்... புகழ் சேர இன்பம், செல்வம் பெருக இன்னும் பிற... வளர தீப ஒளி ஏற்றுங்கள்! எங்கும், எதிலும் நிறை காண இறை வேண்டுகிறேன் குரு வேண்டி வாழ்த்துகிறேன்! தீ ஆவளி திருநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் நலமுடன், தேக சுகமுடன் என்றும்... என்றென்றும் அன்புடன்.

வருந்த வில்லை...!

எண்ணெய் குளியல் இல்லை எண்ணக் குளியலே! இனிப்பு பலகார மில்லை இனிய பழ ஆகாரம் உண்டே புத்தாடை புது துணி இல்லை புதிதாய் துணிவே எல்லை மத்தாப்பு பட்டா சில்லை மனதிற்குள் ஒளியும் ஒலியாய்... ஆலய தரிசனமில்லை ஆஸ்பத்திரி அறை எண் மூன்று ஒன்று இரண்டு மந்திரங்கள் மட்டும் உச்சரித்துக் கொண்டு மனதில் கவலை இல்லை மகனின் நிலை பரவாயில்லை! அம்மாவாசை நினைவில்லை அவ்வழி விரதமில்லை! இனிதாய் கடந்தனவே இனிய தீ ஆவளி திருநாள்! வாழ்த்துகள் பல கூறி மனம் மகிழ்ந்தே இன்று ஒரு நாளாய் இன்னு  மொரு நாளாய் ஐப்பசி கடந்தனவே அய்யம் பசியாய் மறைந்தனவே! தெளிவு பிறந்த்து இங்கும் பலர் பண்டிகை இல்லாது... தெளிய மறைந்தது இன்று ஒரு நாளாய் மறவாத திருநாளாய்... மறப்பதற்கு வெகுநாளாய் இருந்திடாது- இறை வேண்டி குரு வணங்கி நல்லதே நடக்க நா வேண்டுகிறேன்! நாளை நடப்பதும் நடக்க விருப்பதும் நன்மையாய், நன்மைக்கே என- இன்றும் கடந்தது நிறையாய் என்றும் கடக்கவே  காக்கவே இறைவா என் தலைவா என் குருவே நீ வாழ்க வாழ்க என்றென்றும்!