Posts

Showing posts from February, 2024

நட்புடன்.. பகிர்வு!

சொல்லாடுதல்  சுகந் தான்.. சேர்ந்து  - நட்பு டன்  கொண்டாடுதல் தனி சுகம்!  கண்ணாடி குவளையில்  கண்டெடுத்த திரவ மது.. கால் நிறப்பி  - நிறுத்தி  மீதி நீராக விதி மீறாது  மதி மாறாது நிதானமாக சுவைக்க  நீ! தானமாக கொடுக்க  சொற்கள் வழிந் தோடும் மிகுந் தோடும்!  தீடீரென பதவி உயர்வாய்  பெருஞ் செல்வந்தனாய்  வீரங் கொண்ட மறவனாய்  நன்றி மறவா  நினைவுடன்.. நரை மறந்து நிறை கண்ட உயர் புருடனாய் காணத் தெரிவாய்.. சீசா காலி யானதும்  வீசா இல்லாதே - வெளி  தேசம் பறப்பாய்  நேசம் மறவா  பாசத்தால் பயணிக்க.. உச்சத்தில் உளரலும்  உண்மையாய் போகுமே! நாட்டாண்மை யா - நானிருந்து நாளும் சொல்வேன்  நட்பின் பகிர்வு  நண்பனின் பரிவு  மறக்குமே பிற.. பறக்குமே மனம்  இறக்கை இல்லாது! இது போல் எதுவும்  சொல்லாது!  நட்பு பொல்லாது- வென வார்த்தைக்கு பஞ்சமில்லை  வாதம் கொஞ்சமில்லை  வர்க்க கர்வமில்லை  வீழ்வேன் யென  கவலையு மில்லை தீர்க்க மாய் தீங்கு நேராது  நண்பன் உடன் இருக்க.. பாராது முகம் சுர...

நட்பு என்பது!

எது நட்பு!  நண்பன் யாரென.. அன்னை யிடம் கேட்டேன்  உச்சி முகர்ந்து  உளமாற சிரித்தாள்! தந்தை யிடம் கேட்டேன்  தோளோடு அனைத்து  இருக்கிச் சிரித்தார்!  ஆசானிடம் கேட்டேன்  சொல்லிக் கொடுப்பவன்  நம்பிக்கை யை சொல்லில் கொடுப்பவன்!  வாய் விட்டுச் சிரித்தார்.. உறைவிடம் கேட்டேன்  அது- உசத்தி யென  சொல்லி சிரித்தனர்!  அக்காவிடம் கேட்டேன்  ஆகாயம் பார்த்துச் சொன்னார்.. அதை - சொல்லால் அளவிட  முடியா தென! தங்கையிடம் கேட்டேன்  உடன் பிறவா பிறப்பு  மகிழ செய்யும்  புற உறுப்பு! ஆறாவது விரல்.. நண்பனிடம் கேட்டேன்  கை குலுக்கி  கட்டித் தழுவி  நெஞ்சோடு சேர்த்துச் சொன்னான்.. நீ!  எனது இன்னொரு  நான்.. நான் - என்றும்  நீ! ஆக.. இறையிடம் கேட்டேன்  என்னைப் போல்.. அவனும்  - உனை நிறை கொள்ள செய்பவன்!  பறை அடிக்காது  பிறை போல் ஒளிரும்  நண்பன் இருந்தால்... அனைத்தும்  மறக்கச் செய்யும்! அவை  அனைத்தும்  எனக்குச் (உனக்கு) சொல்லும்.. நண்பன் யாரென  நட்பு எது வென்று..!