உலகத் தண்ணிர் தினம்!

தினம் தண்ணிர்
உபயம்!
உலகத்தில்...
நிலத்தடி நீரும்
வற்றிப் போகுதே-நாளை என்ன?
என்பயம்!
நம்மை  காக்க
வரும் நன்மை காக...
நீரின்றி யமையா உலகு!
நீர்த் தேவை நீண்ட தேவை!
ஆக-
சிக்கனம் தேவை
இக்கனம் உதவ...
நீர் சேமி-நித்தம்
அது பூமியின் இரத்தம்!

முத்தாய் நீர் சேர்க்க
சொட்டாய் சேரும்-நாளை சொத்தாய்
மாறும் பார்!
வீணாகா நீர்-நாளை
விளைச்சலுக் காகும்!
கரிசனை காக்க-நாளை
கரிசலைக் காக்கும்!
இது தகவலுக்கு அல்ல
நம் தலைமுறை க்கு...

நீர் பயிருக்கு உயிர்
நம் வாரிசுக்கு உயர்
ஆகாய நீர்
ஆழத்தில் சேர்-அந்த
ஆதாயத்தின் வேர்
நாளை-
ஆலயத்தின் நேர்!
தனிமையில் சிந்தீர்
ஆனா
தண்ணிரை நிந்தீர்...

முன் யோசனை முன்பு
சொன்னது தான்-நம்
மூத்தோர் தந்ததுதான்
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்!
நட்ட மரம்
இட்ட உரம் - அது
தொட்ட அறம்
காப்போம் மனிதநலன்
சேர்ப்போம்!

நித்தம் சேமி-அதில்
திமிர் காமி
நிலத்தடி நீரே...
நிறைவான சாமி!
உலகத் தண்ணிர் தினம்
தினம்  - தண்ணிரே
உலகை காக்கும்!
இது தகவலுக்கு அல்ல
நம் தலைமுறை க்கு...!

அன்புடன் தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1