பச்சை மரமே
பசுமை நிறமே!
உன்-உச்சம் எதுவரை
வானந் தேடும்
அது வரை!

எனக்கு பிடித்த விசயங்கள் பல உண்டு..
நீ!
வேர் பிடித்து நினறது
அதிலொன்று!
நான் பிரமித்தவை
பலவுண்டு - நீ
கிளைப் பரப்பி
நிலங் காத்தாய்...
இலை சேர்த்தே
நிழல் பார்த்தாய்
அது வொன்று!

மண் நீர் உறிஞ்சி
வேர்த்தாய்
வான் நீர் வாங்கி
மண்ணில்  தேங்(க்)கி
மறுபடியும் வளர்ந்தாய்
ஓங்கி...!

ஒரு காரணமுமின்றி
காரியம் செய்தாய்!
கருமேகம் சூழ்வுறச்
செய்தாய்...
சூரிய ஒளியின்
வலி குறையச்
செய்தாய்!
சோதனையின் போதும்
வேதனையின் போதும்
சோராக்க காசாய்
நின்றாய்!

உண்மை க்கு மட்டுமல்ல
உருப்படியாய்  ஏதாவது
செய்யாவிட்டாலும்
உன்னையே
உவமையாய்
உருவாக்கினாய்...
எம்மை சிலநேரம்
ஊமை யாக்கினாய்!

பெருமை கொண்டோம்
உன் மீது
பொறாமை கொண்டோம்...
உன் போல்-உலகத்திற்கு
பயன் இல்லை யென்று!

அருமை உணர்தோம்
அதன் பால்-அன்பு
கொண்டோம்!
ஆகையால் அருகில்
கண்டோம் - என்
வீட்டில் என்றும் நீ!
உன் நிழலில் நான்!
நான் இருக்கும் வரை
நீ இருப்பாய்!

இந்த உண்மை
எல்லோருக்கும்
தெரிந்தால்
எங்கும் இருப்பாய்
உயிர் செழிப்பாய்!

பச்சை மரமே
பசுமை நிறமே-நீ
பரவச் செய்  - நம்
உறவே... மெய்!
என்றும்

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1