யாதும் ஊரே...

யாதும் ஊரே
யாவரும் கேளிர்
கனியர் சொன்னது!
பொது கிணறு யில்லை
பொதுக் குள மில்லை
குழா யடி சண்டை யும்
தீரவில்லை...
ஆற்று நீரை அளந்துங்
கூட அவல நிலை...
அதிகார பங்கு
ஆதாரமாய் இங்கு!

அண்டை மாநிலத்து
நட்பில்லை
அனுசரிக்க சிறிதும்
துப்பில்லை!
பிறந்தார் வளந்தார்
துறந்தார் மறந்தார்
இருந்தார் இறந்தார்!
மறுப்பேது மில்லை-இது
மாறப்போவது மில்லை!
இன்னும்மா கனியார்
நீர் சொன்னதை
கேட்பது...  (கேட்பதா)
கேளிக்கை யாய் பார்பதா!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1