உள்மனம்...

பெண்!

முகம் பார்த்து சென்றே
மூளை வீங்கிச்
சாவேனோ!
அதை முனையில்
கிள்ளி எரிய
மனதில் முளைக்காதுப்
போக-
மார்க்க முண்டோ
ஒரு மாத்திரை வுண்டோ!
காமத்தின் கஷ்டத்தை
அதை விடாது
இஷ்டத்தை...
யாரிடம் சொல்ல!
கலவி இல்லாது-மனம்
கழுவ என்னச் செய்வது
மனப்பாட்டிலே
விருந்தில்லா-
நாட்டிலே காட்டிலே
மருந்து ண்டோ...
மாயம் யென்ன-அதில்
மயக்கம் யென்ன!

பார்த்தலே பரவசம்
பார்க்காது போனால்
இன்னும் விரசம்...
மோச மென்று தெரிந்தும்
மனம் மோட்சத்திற்கு
அலையுதே!
அவதியாய் ஆவதில்லை
இத் தனிமை
ரசிக்க ருசிக்க...
இயலாமையே போலும்
இந்-இன்னலுக்கு
காரணம்!
இருந்தும் என்
கவிதைக்கு-ஒர்
உதாரணம்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1