Posts

Showing posts from October, 2018

மந்தியுடன் சில நிமிடங்கள்...!

அன்றொரு நாள் வேளை பளுவின் மத்தியில்... வேர்வை துளிகள் நெத்தி யில்! சற்றே ஓய்வுக்காக சாய்ந்த நேரம் அந்தி நேரம்! அங்கே- மந்திகள் சில வந்த மாயம்... மரத்திலிருந்து மதிலுக்கும் மதிலில் யிருந்து ஆஸ்பத்திரியின் சன்னலுக்கும் தாவித் திரிந்தன... சின்ன சந்தோஷம் தூவி சென்றன! முகம் அகன்று ஒடுங்கி சுருங்கி கண்கள் இரண்டும் பளிச்சென்று... சிலிர்ப்பூட்டும் சிரிப்பு! குத்த வைத்து-அமர்ந்து கைகோர்த்து உணவை வாய்க்குள் செலுத்திய அழகு! பார்க்க ஆணந்தமாய் இருந்தது - சிறிது அச்சமாகவும் இருந்தது! நடக்கையில் பின்புறம் சிறிது பலதுக்கு சிவந்து காணப்பட்டது! அங்கு மட்டும் ஏன் சிவப்பு ஆராய மன மில்லை! உடற் ரோமத்துடன் உருவ ஒற்றுமை யுடன் பருமனாக ஒடுக்கமாக சிறிதாய் பெரிதாய் வயிற்றில் குட்டியுடன் பலவாறு... பயமின்றி திரிந்தன நம்மை-பார்ப்பவர்களை பயமுறுத்தி அலைந்தன! கையில் வைத்திருப்பதை எட்டி தாவி தட்டி பறித்தன பார்க்க பரவசமாக இருந்தாலும்... உள்ளுக்குள் சிறு பயம்! குரங்கு(கள்) குட்டியை பிடிப்பதில்லை... குட்டிகள் தான் தாயே பற்றிக் கொள்கிறது! தாவும் போதும் ஓடும் போதும்...

மனதின் அசை-வில்!

சிறு புல் தின்ற ஓர் பசுவாய்... ஏதும் அறியாது நின்ற ஒரு சிசுவாய்! சில காலம் கடந்தேற சிலவற்றை சந்திக்க சிலவற்றை நிந்திக்க தவற்றை எண்ணி... பின்நோக்கி பயணிக்க - பயனாக்க... அசைப் போட! வாலிபம் கடந்து போனது! நாற்பதை கடந்து அரைநூற்றாண்டின் அருகில்... நிதானம் தப்பி யது-என் நிர்வாகம் தடுமாறியது அது தடம்மாறியது! நிலையானது எது-இங்கு நிலைத்தவை யெது... ஏகாந்தம் கேட்க-மனம் ஏளனம் பேசியது! வெட்டி வேலை திரும்பி பாராதே போகும் தடம் மாறாதே... எளிதல்ல இது ஏறி அமர்வதற்கு ஓடி ஒழிவதற்கு மெல்ல அறிவதற்கும்! சித்த நெறி- சிவ நெறி வாசித்தால் விளங்காது அதை- ரசிக்க ருசிக்க... உன்னால் அதில் வசிக்க முடியாது! சிற்றின்பம் பேரின்பம் பெரும் பாவம் பேசுவதெல்லாம் எளிதில் போணியாகது! பேத்தலாய் நீ நிறம் மாறலாம் உரு மாறலாம்-ஆனால் உண்மை மாறாது எப்போதும்! எங்கனம் வந்தாய் உனக்கு தெரியாது எதற்கு வந்தாய் விடை அறியாது - பின் என்ன ஆவாய்-அதுவும் உன் கையில் இல்லை எதற்கு இப்போராட்டம் விட்ட வழி செல் வந்த வழி பாராதே! இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாய்... என்னாதே! புழுங்க...

சின்னஞ்சிறு வயதில்...!

சிரிக்க மட்டும் தெரிந்த வயது சிரித்து கொண்டே இருப்போம்... சந்தோஷம்-அது தனி என்று இல்லை அதன் சார்ந்தே! படித்தது மறக்க வில்லை படிப்புதான் எதுவென்று தெரியவில்லை... படிக்க சிறிது சிரமம்! அழுகை எப்போதுமில்லை வலிக்கும் போது மட்டும் வலித்தால் அழுகை... வரும்! காலை கல்வி கூடம் மாலை விளையாட கூடும் கூட்டமாய்... செலவுசெய்ய தோன்றுவதில்லை சில்லறை இல்லாத போது... கடன் வாங்கி! சாம்பாத்தியமும் தெரியவில்லை ஆனால் சேமிக்க ஆசை... உண்டியல் தினம் என்னை நோக்கும்! உடைந்த பென்சிலும் தைத்த செருப்பும் தையல் பிரிந்த(கால்) சட்டையும் கைப்பையும் அலுமினிய பாக்சும் அசிங்கமாக தெரியவில்லை எதையும் சட்டை செய்வதில்லை! வருத்தக் கோடு வறுமை கோடு-இருந்தும் அர்த்தம் புரிவதில்லை அதை ஆராய்ந்தும் பார்பதில்லை! பழைய புத்தகம் பாதிவிலை... படித்துமுடித்து(கிழியாமல்) அதையும் பாதிக்கு விற்றோம்! தீபாவளி க்கு சீருடை என்றாலும் சிரித்தே உடுத்தி னோம் (அடி வாங்குவது யாரு) விலை குறைந்த பட்டாசு கை நிறைய... சந்தோஷம்! பொங்கலுக்கு அடிகரும்பு போட்டி போட்டு மென்றோம் மறுநாள் எடுத்து வைத்து தின...

விஜயதசமி வாழ்த்துக்கள்!

தசமி அன்று தடை அகலட்டும் கொடை பெருகட்டும் நடை உயரட்டும்... தசமி இன்று! சுயம் யோசி நன்று மனம் கழுவி வேண்டு உறவு தழுவி போற்று துயர் நழுவி அகற்று... ஆற்றல் பெருக்கி போற்றுதல் கூட்டி பொறாமை கழித்து நல்லொழுக்கம் வகுத்து வரவை சீராக்கு வாழ்வை நேராக்கு! வாழ்க வளமுடன் நலமுடன் சுகமுடன் என்றும்... என்றென்றும் அன்புடன்

சிறு வயது கல்வி!

அப்பாவின் ஆர்வ கோளாறு... ஆங்கில வழி கல்வி! ஆங்கிலம் அந்நிய மொழி அந்தரத்தில் அர்த்தமற்று ஆனி வேர் அறியாமலே... கிராமர்-கிராமத்து வாசம் அதுவும் நமக்கில்லை கிரக தூரம்! தமிழ்! தட்டு தடுமாறி மனப்பாடம் மறந்து போகும் கோனார் உரையே துணை! இலக்கணம்-என்றும் இரக்கமற்ற சந்திப்பு! மேத்ஸ்-கனிதம் அது மிக கணம்! மேதை ஆக்கியது- படித்தவர்களை! என்னைப் போல் பார்த்தவர்களை... சயின்ஸ்-அறிவியல் சங்கடபடுத்தியது எம்மை பெரிதும்... சங்கடபடுத்தினேன் நானும் சிவப்பு நிற அடி கோடிட்டு! ஹிஸ்டரி-ஹிம்சை படுத்தும் வருடம் மாறி நிகழ்வு மறந்து போகும் வரலாறு தானே வாராது போகாது என நம்பிக் கெட்டேன்! ஜியாகரப்பி-அது ஜென்டில் ஒமிட்! புவியியல் புலங்காது சாய்சில் விட்டேன்... பிறகு(வேறு)-என்னதான் படித்தாய்!? அத்தனை யும் அரைகுறை யாக... அதனால் தான் என்னவோ இப்படி (நானாக) இருக்கிறேன்... இப்படியே (தானாகவே) இருக்கிறேன்! இன்னல் ஒன்றுமில்லை புது சன்னல் வழியாக சிறு மின்னல் கண்டு! இப்படி ஏதாவது எழுதிக் கொண்டே...