சிறு சங்கடம் கூட...

சிறு சருகும்
நீரோட்டம் தடுக்கும்...
சிறு சங்கடம்
மன ஓட்டம்
கெடுக்கும்!

வில் அம்பு
பழகாது...
பழகியவன்
வித்தை காட்டும்
 போது
கை தட்டும்!
நல் அன்பு
பழகாது
ப ழ கியவன்
வார்த்தை (வாழ்க்கை)
காட்டும் போது
மனம் கொட்டும்!

சிறு சொற் கூட
சில நேரம்
சிலையாய்,
வடுவாய்
நெஞ்சினிலே...

மேடை அமைத்து
விவாதம்
பண்ணக் கூடும்!
விடிந்துங் கூட
விடை காணாது
 போகும்...

மொழிக்கு இல்கணம்
 முக்கியம்...
சொல்லி தந்தார்கள்
சொல்லியதை
எழுதி வைத்தார்கள்!
வாழ் வியலுக்கு
எது முக்கியம்..
சொல்லாது
சென்றார்கள்
எழுதாது போனார்கள்!
அவர்களுக்கு
தெரியக் கூடும்
இலக்கணம் மாறாது
வாழ்வியல் ஏற்காது...

நிலை உயரும் வரை
நினைவு உள்ள வரை
நித்திரை கேடாய்
நித்தம்மும் கேடாய்
நிரந்தர கேடாய்...
புரியாது(தே) போகும்...
சிலது -
புரிந்தும் போகும்...
இப்படிதான் என!

வையத்துள் வாழ்வு
நிலைக்க பெற
அது -
செல்வத் துள்
 செல்வமாய்...
நினைக்கப்படும்!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1