கடவு சீட்டு!

கடல் தாண்ட 
தகுதி! 
இனி - அயல் நாடுகளில் 
அந்நியனாக 
அந்(த) நீயாக 
அங்(கு) நீ ஆக - வலம் 
வரலாம்  வரலாம்...
ரைட் ரைட். 
அவ்வளவு ஆர்வமா?!
ஆச்சரியக்குறி!
இனி போய் வெளி நாட்டில் 
வேலை பார்க்கவா! 
இல்லை  - இல்லை 
அப்புறம் 
வேடிக்கை பார்க்க வா!
அம்புட்டு வசதியா..
இல்ல - 
வாய்ப்பு கிட்டினால் 
பார்க்கலாம்... 
கலாம்.. லாம்..ம்.
அதுதான்! 
அனுகூல நட்பாய் 
அழைத்தால்..
அழைப்பார்களா உன்ன! 
ஆள் இருக்கா?
அது - கேள்வி குறிதான். 
பின்-
வாய்க்கு மானால் 
வாய் பிளக்காது 
அல்ல - திறக்காது
செல்ல லாம்.. ம்!
நினைப்பா!
இல்ல-
ஆனிப் போய் 
ஆவணி வந்தா...
கஷ்டம் ஒன்றுமில்லை
காத்திருப்போம்! 
வாய்க்கு மானால்..
எதற்கும்  இருக்கட்டு மென
தேவை தானே  - இந்த 
கடவு சீட்டு !
கைக்கு வந்தது
வாராது இருப்பது 
அந்த நுழைவு இசைவு!
அது வேற..
யார் தருவார் இந்த 
அறி யா சனம்! 
வா-ச-அகம் 
கவிதை யின் இடையில் 
வரும் மூன்று புள்ளிகளாய் 
மற்றும், இன்னும், பிற..
வழி உண்டா 
யோசிக்க(னும்)
அறிய
 தெரிவித்தேன்! 

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1