ஆண்-டால் (doll) அடிமை!

ஆண்- டால்( doll )
அடிமையாய்...
ஆண்டாள்! 
காதல் பித்தாய் 
பற்றாய், அன்பால்
நோ யுற்றாள்...
கர மறந்து மா தொடுக்க 
மன மறந்து பா தொடுக்க 
காதல் சேர - தமிழ் 
சேர்த்தாள்! 
தன் காதலனை 
கண்ணன் அவனை
கருப்பு மன்னவனை 
கரம்பிடிக்க - 
அடம் பிடித்த 
பெரி ஆழ்வார் மக
பின்  - ஆள்வாரின்
மனை யானாள்! 
அவ் வாண்டாள் 
திரு வள்ளி புத்தூர் 
ஆண்டாள்! 
அப் - பா  
திருப்பாவை!
அதில் ரெங்கி யவன்
திரு ரெங்கன்! 
பா-மா தொடுத்து 
பாமா இடத்தில்  நின்று 
காதல் வென்று 
சாமர்த்திய  மொன்று 
அது- அவளுக்கு 
சாத்திய மானது
அதுவே  - பின் 
சத்திய மானது! 
மார்கழி திங்கள் 
மனங் குளிர 
அவள் பாடிய 
திருப்பாவை 
  தினப்பார்வையாய் 
தினந் தோறும் 
திரு  ரெங்கத்தில்!
அரங்கன் இருக்கு ம் 
இடமெல்லாம்- இருப்பாள்
ஆண்டாள்  ஒளியாய் 
திருப்பாவை ஒலியாய்! 
அவளது பூசை
அரங்கனின் ஆசை
நமக்கு இனிய 
தமிழ் ஓசை! 
அன்று  - 
அவளது  ஆர்வம் 
ஆச்சரிய குறியாய்!
பிறகு  - இது
நேருமோ கைகூடுமோ?
என கேள்வி குறியாய் 
நிகழ்ந்தது!  - அவளது 
நிழல் அகலாது 
அவனிடம் ஒன்று சேரவும் 
சேர்க்கவும் 
நிகழ்ந்த அதை 
மகிழ்ந்த அதை! 
இன்னும் தொடர்கிறதே...
முடிவில்லா புள்ளிகளாய்! 
ஆண்டாள்! 
அன்பிற்கு இல்லை அழிவு 
அவ- அரங்கனிடம் 
கொண்ட மகிழ்வு! 
இது- மனிதன் 
இருக்கு மட்டுமல்ல...
இந்த மண் மறையும் மட்டும் 
அந்த  - 
விண் நிறைய முட்டும் !
நினைந்து இருக்கும்!
நிறைந்து(ம்) இருக்கும்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1