சொல்லிக் காட்டா தீர்..!

அன்பை
சொல்லில் காட்டுங்கள்..
சொல்லிக் காட்டாதீர்கள்!
பாசம் 
பார்த்து அளிக்காதீர்..
பகிர்ந் தளியுங்கள்! 
காதல் 
சொல்லால் வேண்டாம்..
செயலில் வேண்டும்! 
அறிவு 
ஆர்வங் கொள்..
ஆணவம் கொள்ளாதே!
ஆசை
அளவோடு..
போதுமெனும் உளமோடு! 
வாழ்க்கை 
வாசிக்க பழகு
யோசித்து விலகு..
நேசித்தல் அழகு! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1