தேர்தல் காட்சி - நாமே சாட்சி!
இந்த-
பொது தேர்தலை
பொதுப் பிரச்சினையாக
அனுகுங்கள்.!
பொதுவாய்- பிரச்சினையா
பார்க்காதீர்கள்..
நாட்டின் வளர்ச்சிக்கு
உதவும் நப(ரை)ராய்
தேர்ந் தெடுங்கள்..
நபருக்கு உதவும்
வளர்ச்சியாக தேர்வு
செய்யா தீர்கள்!
பலன் என்ன
பயன் என்ன - சொல்லும்
நய மென்ன..
யோசித்து - பயமில்லா
தேர் வாகட்டும் - புது
தேர்த லாகட்டும்!
இங்கு-
முழு நல்லவரும்
அதிக கெட்டவரும்
எவரு மில்லை..
இருப்பதில்
தேர்வு செய்வோம்!
நிறை இல்லாது போனாலும்
குறையில்லா ஒருவரை
குறை இல்லாதவர்
இல்லை என்றாலும்
குறைந்த- குறை உள்ளவர்
எவரோ?! - அவரே..
வேறு வழி யில்லை!
அரசின் செயல்களை
ஆட்சி ஆள்பவர்களை
விமர்சனம் செய்யுங்கள்
தவறில்லை..
அவர்களது அந்தரங்கம்
நமக் கெதற்கு !
நாலு பேர் இருக்கும்
ஒரு வீட்டில்
நால்வரும் வேறு வேறு மாதிரி!
நாற்பது பேர் இருக்கும்
அரசின் சபையில்
கொஞ்சம் நாரத் தானே
செய்யும்!
தெரிந்த அதை சொல்லுங்க
தேவை இல்லா அதை
சொல்லாதீர்கள்!
ஒரு கட்சி சார்ந்து
இருங்கள் - தப்பில்லை..
சார்ந்தே இராதீர்!
அது- நல்லதற் கல்ல
பல வகையில்
கண் மறைக்கும்!
நம் நாடு
நம் தேசம் - நம்ம நேசம்
நம் அரசு- நல்(வல்)ரசாக
நம்மில் ஒருவர் தான்
(மக்களில் ஒருவர்)
புது உறுப்பினர்!
அதில் - அந்த
பாதிப்பும் பங்களிப்பும்
நமக்கு(ம்) தானே!
தனி மனித விமர்சனங்கள்
வேண்டாமே..! - நண்பர்களே
அரசியல் அசிங்கம்
ஆரோக்கியமாக நடக்கட்டும்
நாளைய ஆட்சி
நல்லதாய் அமைய..
நாமே சாட்சி!
காண்போம் புது காட்சி..
Comments
Post a Comment