அதுவும் இதுவும்- ஒன்னா..!

நண்பா! 
அன்பும் அரசியலும் 
ஒன்னா..!
ஆதங்கப் படுவது 
அவசரப் படுவது 
அமைதியாக கடப்பது..
அடிமை யாய் இருப்பது!
ஆரம்ப அரவனைப்பு 
பின்- அந்தரங்க ஆராய்ச்சி..
சமர்ப்பணம் அப்புறம் 
விமர்சனம்! 
ஆனந்தமாய் பார்த்த-அதை
அசிங்கமாக பார்ப்ப அது!
தேன் ஒழுக பேசுவதும் 
பின்- தேவை இல்லா 
கூந்தலாய்..
கொடுக்கப் பட்ட வாக்குறுதி 
மறக்கப்படும் வசதியா 
இறுதியில்! 
வீதியில் விசாரிப்பு 
விழாவில் சந்திப்பு..
உயர்ந்த பிறகு உதாசீனம்! 
உயரும் வரை உடுத்திக் 
கொள்ளும்
உறவு முறை - உடைகளாய்..
மனசாட்சி மட்கும் தன்மை! 
வெளிப்புற வெண்மை 
சாதித்த தும் - இதில் 
சாதிப்ப தும்  என்ன?!
மனச் சிறையில் - அல்லது
மரணச் சிறையில்..
சொத்துக்களே சொந்தங்களாய்..
நிலை மாறாது  - ஆனா 
அதன் விலை மாறும் !
பாதிக்கப்பட்டவன் எப்போதும் 
பாவப்பட்டவன்!
பரிதாப சூழல்  - அதிலும் 
ஆதாயம் தேடும்! 
வென்றால் உச்சி முகரும் 
விட்டுச் சென்றால் 
எச்சில் உமிழும்!
பாக்கியம் உண்டு 
பத்திரமாய் இருந்தால்..
அளவிற்கு மீறினால் 
உதவி கெடும்- அதில் 
பதவி கெடும்! 
உருட்டல்- உண்மை மிகும்! 
ஏதும்  உத்திரவாத முண்டோ 
கெடா அது இருக்க?!
மருந்தால் ஆகாதது 
மறந்தால் ஆகும்! 
அது போலத் தானே
இதுவும்! 
அன்பும் அரசு இயலும் 
ஒன்னா..


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1