விவாதம் போதும் - விடை தேடு..!

விமர்சனங்களும் 
விவாதங்களும்  - வீணாகி
போய் விடக் கூடாது! 
அரசியல் வேண்டுந்தான்..
அதிகம் நோண்டக் கூடாது! 
அப்புறம்  - அது
குரங்கு கையில் கருவாடாய் போகும்! 
அவசரப்பட்டு முழுதும் 
உரித்தாலும்..
பொறுமையா மெதுவா
காய வைத்து உரித்தாலும் 
பின்பு- வெறுங் கைதான்! 
தேர்தல் நேரத்து - அவலாய் 
மென்று விட்டு போவோம்..
முலைச் சூடு - நிரந்தரமும் 
இல்லை! 
அதை நிராகரிக்கவு மில்லை..
பொழுதும் முகம் புதைக்க 
முடியாது! 
போர்வைக்குள் பேசி 
பயன் என்ன?!
வெறும் மரத்தை சுற்றி
வந்தால் பிள்ளை வருமா..
ஆயுதம் ஏந்த வழியில்லை 
அதற்கு- தயாரில்லை! 
ஆனா- போர் விமர்சனம் 
போதும் அளவிற்கு..!
நலன் வேண்டிக் கொள்வோம் 
பலன் குன்றாது! 
ஜெயிக்கும் கட்சி 
பெரும் பான்மை பெறட்டும்! 
தொங்கு  மக்கள் அவை
அவை- மக்களுக்கு 
தீங்கு  ஆகும் !
பின்- ஆட்சி வேண்டி 
மா(கா)ட்சி மாறும் !
தொங்கினால் 
துவளும் கட்சியு முண்டு 
துள்ளும் கட்சியு முண்டு..
காணகூடாதது 
காண வேண்டி வரும்! 
நடக்க கூடாத அது 
நடந்(து)  தேறும்..
ஆக- இன்னொரு 
தேர்தல் செலவை 
நாடு தாங்காது..
அத் தேவை இல்லாது
இத் தேர்தலை கடவோம்! 
அதற்கு  - தயங்காது 
ஒழியாது மறையாது 
வாக்கு செலுத்து வோம்! 
சாக்கு சொல்லாது..
வென்றவர்கள் உதவட்டும் 
நடுவன் அரசு - நல்ல ரசாக
நாடு வல்ல ரசாக! 
வாழ்க பாரதம்! 
வாழ்க தமிழகம்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1