செய்யாதே.. தானம்!
நீ!
தானம் செய்யாதே..
அது-
நிதானம்!
அதை
இழந்தால் நித்தமிழக்கும்
பெரு மகிழ்வு..
வலுத்தால் - நித்தம் மகிழ்வு
அது நிகழ்வு!
தவறினால்..
மாறிடும் சூழ்!
தவிர்த்தால் மாறுபடும்
மேல்..
அது-
நழுவினால் தடுமாறும்..
உன்னை தழுவினால்
தடம் மாறும்!
எதையும் இழக்காது இருக்க..
எதுவும் நிலைக்க-
நீ! செய்யாதே தானம்
அது- நிதானம்!
Comments
Post a Comment