கடல் தாண்டி ஒரு பயணம்!
கடல் தாண்டி ஒரு
பயணம்!
ஆகாய மார்க்கமாக
ஆனந்த மாக்கியது..
மகளது அழைப்பு
மனதின் பூரிப்பு !
எனது துணைக்கு
துணையாக நானும்!
அவளுக்கு முதல் அனுபவம்
ஆகவே பயணத்தில்
முழு கவனம்!
பெங்களூரு
விமான நிலையம்
வியப்பாக இருந்தது
கத்தார் - தோகா நிலையம்
பார்க்கும் வரை..
பரந்து விரிந்து
ஓர் ஊர் போல்..
காட்சி அளித்தது!
விமானங்கள் வரிசை கட்டி
நம்மூர் - பேருந்து நிலையத்தில்
நிற்கும் - பேருந்துகள் போல்!
ஒரு நகருக்கு உள்ள
பரப்பளவில் - பளபளப்பாக..
பார்க்க பார்க்க வியப்பாய்
வியந்து - விழுங்கியது
விழிகள் இரண்டும்(நான்கும்)
விதவிதமான மனிதர்கள்
வேடிக்கையாய் எனக்கு!
வெகு நாள் ஆசை
வசந்த மாளிகை - படம்
பார்த்த திலிருந்து..
தரையில் தனியாக
மலையில் மறைந்து
அருவியில் அறைகளில்
அனுபவித்து விட்டோம்!
மகா நடிகர் போல்
ஆகாயத்தில் பறக்கும் போது
சுக பானம்
அது உம்..
நிறைவேறியது!
சிரித்து விளித்து
பரிமாறப் பட்டது!
ம்யூனிக் - ஜெர்மன் (தெற்கு)
நகரில் தரை தொட்டது!
மண் மிதிக்க ஆவல்
முதல் இரண்டு நாட்கள்
வாய்ப்பே இல்லை!
எங்கும்
காங்கிரிட் தரை தளம்
பேருந்து - விரைவு ரயில்
அடிக்கடி அதிகமாக..
எங்கு(ம்) செல்வதற்கு எளிதாய்
சாலை எங்கும் சிற்றுந்து
சீற்றமாய்..
சாலை யோரத்தில்
நடை பாதை
அருகிலே மிதிவண்டிக்கு
தனி பாதை!
என் காதை
தொடரும்..
தேவா.
Comments
Post a Comment