ஜெர்மன் நகரில்..!



நகரும் நாள்கள் - என்னோடு 
வியந்த வை - வியக்க 
வைத்தவை - அதை நான் 
பகிர்ந்த வை..!
கைபேசி கலாச்சாரம் 
இங்கேயும் - ஆனா 
அவை - தேவைக்கா
தேடலுக்கா - இல்லை 
பொழுது போக்கா..
தெரியவில்லை!
புகைப்பான் இங்கு 
பகைப்பான் இல்லை 
பொது விடத்திலும்..
பொதுவாய் போனது!
இதில் - பால் முறை 
பேதமில்லை..
எனக்கும் - அது
 வசதியாக போனது!
ஆனாலும் - 
மகளதி-காரம்..!
அன்பும் அதட்டலும் 
அலட்டலாய்..
கவனிப்பும் கண்டிப்பும் 
கர்சனையாய்..
கண்டிசன் பெயிலில் 
வாரம் இரண்டு மட்டும்!
பாக்கெட் களாக..
பெண்கள் ஆண்கள் 
அனைவரும் -
உடல் வாகுவுடன்..
பெண்கள் - ஆகா!
முன்னாடி வருவோர்
 எல்லாம் - கலர் 
கண்ணாடி அணிந்தே
பள்ள மேடு தெரியாது 
சிறு மடு வாய் - முகடாய்
குன்றை பிளந்தது போல ..
பிட்டம் தூக்கி - துர்த்தி ஆட்டி
பலதும் - பல வகையாய் 
இருந்தாலும் 
அழகு அழகு தானே!
முக நகையுடன் 
பார்க்கும் போது..
கழுத்தில் காதில் 
பெரிய அணிகலன்கள் 
ஏதுமில்லை!
உடுத்தும் துணிகள் மட்டுமே 
பார்க்கவும் - பார்த்ததும் 
பரவசம்!
சோர்வில்லா மனிதர்களை
காணும் போது!
அண்டை வீட்டில் 
அவசிய பேச்சு மட்டும்!
மலர் செடி- வளர் கொடி
தோட்டம் பராமரிப்பு 
பெரிதும் மதிப்பாக 
வீடுகளின் அழகுக்கு 
அழகு சேர்க்கின்றன..
பாசை புரியவில்லை!
பாவனை கள் பேசுகின்றன..
ஆயிர மிருந்தும் 
ஆனந்த மிருந்தும்
ஆசையில் ஆலாய் பறந்தாலும்..
நகரம் நல்லாத்தான் இருக்கு 
ஆனா - நம்ம ஊரு போல 
வருமா..!

இன்னும் வரும்..

அன்புடன் 
தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1