எனதருமை தோழா!
யாரிடம் செல்வேன்..
தோழா!
இன்று - உனக்கான தினம்!
ஆனா- நீ இல்லை
உன்னை காணாத தினம்
அதனால் - எனக்கானதும்
அல்ல..
வேதனைகள் வேறு படும்
இது- வேறுபட்ட வேதனை
என்னுள்!
நினைக்காது இருக்க - இன்னும்
மறக்க வில்லை..
மறந்து போக - நீ ஒன்றும்
என் மறதி அல்ல!
பிரதி என்றெண்ணி
உனை நினைத்தேன்!
பிய்த்து கொண்டு -
என்னை விட்டு பிரிந்தாய்!
பிறந்த வருடம் காணும் முன்னே
நீ மரித்தாய்!
என்ன அவசரம் உனக்கு.
நீ! தான் என்னை விட்டு
மறைந்தாய்
ஆனா - நான் என்னவோ
உன்னை விட்டு மரித்த தாய்
தவிக்கிறேன்..!
இன்று - உனக்கு ஒரு அகவை
கூட்டச் சொல்லும் தினம்!
உன் பிறவித் திருநாள்!
எப்படி கூட்டுவது?!
என்னை விட்டு பிரிந்தாய்
பிரிந்த தால்
ஒரு ஆண்டை கழிக்கலாம்
என் ஆயுளில் இருந்து..
அது தான் சரியாக இருக்கும்!
மாறா நட்பு
மறவா நட்பு - நம் நட்பு
நீ! மட்டும் அதை மறந்தது
ஏன் நண்பா!?
உனக்கு வாழ்த்துக்கள்.. கூட
என் மனதிற் குள்ளேயே..
மிச்சம் - கிறுக்கல் களாய்
இத் தாளில்
உன் நாளில்!
வாழ்த்துக்கள்..டா - நண்பா!
என் மோகா!
உன் தேவா.
21.07.24
Comments
Post a Comment