என்ன செய்யும் ..!
அடித்து
நொறுக்கி
எரித்து -
இ- தென்ன..
வன்மம்!
அழிய - ஒழிய
கண்ணீர் வழிய
இது என்ன..
எண்ணம்!
மதம் வளர
வளர்க்க - காக்க
எத்தனையோ
வழி வுண்டு!
அழித்து - ஒழித்து
பிறர் - விலக்கி
நீ! - எப்படி உயர்வாய்
உன் மதம் - உன்னதம்
எப்படி வளரும்!
உயிர்களை உரமாக்கி
உடமைகளை கரியாக்கி
உரைத் திடுமோ..
உன் மதம் -
பெரி(ய ) தென்று..
நிலை உயர் வென்று!
தாய் போல்
தாய் நாடும்..
தாய் மனம் ஒன்று!
கருவுற்று கர்வமுற்று
ஈன்ற தாய்
உனை காண!
உதிரத்தில்
பிரித் தெடுத்தா ளோ!?
இல்லை -
தொன்னையில்
வடித் தெடுத்தா ளோ..?!
நீ!
செய்த - செய்யும்
செயலை கண்டாலோ
காண நேர்ந்தா லோ..
மீண்டும் உனை
சேர்ப்பாளோ!
உன் அன்னை
இல்லை -
சோற்றில் - ரொட்டியில்
விசம் வைத்துப்
பார்ப்பாளோ..!
Comments
Post a Comment