படித்துறை!
கருங்கல் படியே..
கருங்கல் படியே!
கலங்காதே இப் படியே
நீ!
கலங்காதே இப் படியே!
மிகு கால் பதிந்த - படியே
பெரும் நீர் சுமந்த - படியே!
அடர் பாசம் யெல்லாம்
நெஞ்சோடு..
உனை - பாராது போவர்
நஞ்சோடு!
இதை பார்த்து போவர்
பலருண்டு!
ஆற்று படுகையில்
ஆள் இறங்க..
நீர்! - ஏற
காத்திருக்கும்
சிறு படிகளாய்!
ஆற்றின் இரு கரை யோரம்
இரு கரம் போல..
காட்சி யளிக்கும்
ஆனந்தமாய் பல் காட்டி!
நீர் மிகு புரண்டால்..
பாதிக்கும் படி
மூழ்கினாலும் - வெளியேற
வழி சொல்லும்!
நீர்! வற்றிப் போனாலும்
உள் இறங்க
உட்கார்ந்து பேச இடம்
காட்டும்!
ஏனோ - என்னை
மதியாது போவார்
அனா- மிதித்தும் மறந்து
போவார்!
யாவருக்கும் உதவ
உறங்காதே இருப்பேன்!
இருந்தும் உயர் - எண்ணியது இல்லை!
என்னை ஏற - இறங்க
பயன் படுத்துவார்..
அதன் பின்னர்
ஏற இறங்க கூட
பார்க்காது போவார்!
துணி தோய்த்து துவைப்பர்
அலசி அடித்தும் வைப்பர்!
காது உரசி - கால் உரசி
பேச அமருவர்..
பேச்சு விளங்காது போனால்
என் மீது குமுறுவர்!
போகட்டும் போ..
என்னை பத்திர படுத்த வேண்டாம்!
பாழ் படுத்தாது இருந்தால்
போதும்!
புதிதாக என்னை நீ-
உருவாக்க முடியாது!
அதை புரியாது
உபயோகிக்கும் - உன்னை
தவிர்க்க முடியாத என்னால்!
என் சாதி அக் கடவுள்
அவன் உருவமாய் - மதிப்பீர்கள்!
அவன் சாதி நான்
இங்கு உருக்கமாய்..
மிதிப்பீர்கள்!
கரையோடு என்னையும்
கண் கொண்டு பாரீர்..
அக்கறை ரோடு!
ஆண்டுக்கு ஒரு முறை யேனும்
எனை கழுவி
கறை போக்குங்கள்
அக் கறை காட்டுங்கள்!
அமர - தவம் - வேண்டி
அன்புடன்
மேற் படியான்..
படித்துறை!
தேவா.
Comments
Post a Comment