சினிமா - சினிமா!

அன்றும் இன்றும் 
அமைதிக்கும் 
நிம் மதிக்கும் 
மன மகிழ்வுடன் 
அயர்ச்சி போக்க
பொழுது போக்கவும்..
களமாக இருந்தது
அன்றைய -
திரையரங்குகள் 
திரைப் படங்கள்!
அரிதாரம் அதிகமாக 
இருந்தாலும் 
தெளிவான முகங்கள்!
இனிமையான இசை
வார்த்தைகள் புரியும் 
பாடல்கள்!
எதார்த்த வசனங்கள் 
உணர்ச்சி பூர்வமாக 
உணர்வு பூர்வமாக
சினமாக்கவும் - சிரிக்கவும்!
கண் கூசாத ஒளிப்பதிவு 
இரைச்சல் குறைச்சலாக
ஒலிப்பதிவு!
ஐந்து அரை மணி நேரம் 
போ(ன)வது தெரியாது!
ஆனா - இன்று 
இரைச்சலேடு இம்சையா
இசை!
கண் கூசும் ஒளிப்பதிவு 
செவி மறுக்கும் 
ஒலிப்பதிவு!
அழகான முகங்கள் கூட
அரிதார பூச்சில் 
அன்மை குறைக்கிறது 
வித்யாசம் என்கிற 
பெயரில்!
வரிகள் குறைத்து
வார்த்தைகள்
 புரியாது பாடல்கள்!
தவறில்லை 
தப்பில்லை - நமக்கு 
அது - ஒப்பவில்லை!
ஒரு நல்ல ஞாயிறு மாலை 
வாடிப் போனது!
தேடிப் போன விளைவு..
எத்தனை யோ படங்கள் 
மறு முறையும் 
அதிக முறையும் 
பார்த்து இருப்பேன்!
இப்ப - அப்படி யான 
படங்கள் வருவதில்லை!
வேறு சில படங்கள் 
பார்த்தாலும் 
ஒன்றாது - ஒவ்வாது
போனது தான் அதிகம்!
ஒரே ஒரு அற்ப சந்தோசம் 
நான்கு அரைமணி நேரம் 
குளுமையாக இருக்கையில் 
புகைக்க செல்லாது!
பண விரையம் 
மனக் குறையும் 
இடை வேளையில் 
சந்தித்துக் கொண்டன!
மகனின் ஆசை 
நிறைவேறியது!
மனதின் ஆசை
நிறம் மாறியது..
வாழ்க தமிழ் - சினிமா!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1