காலம் சொல்லும் கலாம்!
அய்யா! உன்னை நித்தம் நினையா விட்டாலும்... உன்னத மானவர்களை நினைக்கும் போது-உன் முகம் நினைவுக்கு வரும்! உயர்வானவர்களை என்னும் போது-உன்னை நினைக்க வரும்! யாரேனும்- இந்தியா வல்லரசு ஆகு மென பேசும் போதெல்லாம்-உன் முகம் கட்டாயம் காட்சியாக மாறும்! தூய்மையான வர்களை நினைக்கும் போதும் உன் முகம் எ(ம்)ன் எதிரில்... எளிமையாக வாழ்ந்தவர்களை எண்ணும் போது-நின் முகம் நிதர்சனமாய்... தெரியும்! என் கனவு மெய்ப்படும் போதெல்லாம் கவர்சியான உன் முகம் சிரிப்பில் வெளிப்படும்! ஊக்கமும் ஆக்கமும் பெற்றவர்களை கானும் போதெல்லாம்... சிறப்பாய் உன் முகம்! பேசா(து)த வெற்றியிலும் உன் வெற்றிப் பேச்சிலும் மனம் நிறைந்திருக்கும் அதில்- உன் முகம் மறைந்திருக்கும்! அக்டோபர் 15ந்தும் ஜுலை இருபத்தேழும் உன் நினைவு நிறைய இருக்கும் இதயம் நெருங்கி நிறைந்திருக்கும்! அறிவுக் கோவிலின் அனையா விளக்கே அன்பின் வடிவமே! அறிவுச் சுடரே மறையா உருவே மாறாத் திருவே... எங்கள் கலாம் அய்யாவிற்கு- தானாய் சலாம் செய்யும் கரங்கள்! அது- நன்றி கரங்கள்... அன்புடன்