வைராக்கியம்!
என்ன அற்புதம் என்ன ஒரு அழுத்தம், அர்த்தம் என்ன ஒரு ஆணவ எழுத்து அருமை! எண்ணத்தை எழுத்தாக்கி வார்த்தைகளில் வாழ்க்கையைச் சொன்ன எனதருமை பாலகுமாரா! பெரும்பாலும் நினையாது கடவாது என் எண்ணம்! - உன்னை சமீபத்தில் படித்தது படித்து பிடித்தது வைராக்கியம்- தெளிவான பிடிவாதம் கோபமற்ற உறுதி...! ஆகா! என்ன ஒரு விளக்கம் எல்லோரிடத்திலு முண்டு எல்லோருக்கு முண்டு! எப்படி- பிடிவாதமாய் பிடி-என் வாதமாய் சொன்னீரோ... குழப்பமற்று யோசிப்பில் சோர்ந்து சுருங்கி விடாது சுயம் கெடாது மாற்று யோசிப்பின்றி தெளிவாக, தெளிவான பிடிவாத(மாய்)மாகவும் சார்பற்ற நிலையில் எங்கும், எதிலும்-சாராது சார்ந்து நோகாது சீர்தூக்கி சிந்தை கலங்காது, (மாறாது) நினைத்து மாறாதும் நினைவிழந்து மாறாமலும் நிலையாய் நம்மை நிலை நிறுத்தி உறுதியுடன்... அட, அடா என்ன தெளிவு எப்படி ஒரு வார்த்தை உன்னதமான விளக்கம் உண்மையுங் கூட...! சத்தியமது உன் வார்த்தை - உச்சத்தில்! சாத்தியமா யது என் வார்த்தை - அச்சத்தில்! எண்ணப் போராட்டம் என்னுள்... ஆலோசிக்கிறேன்- மனதோடு ஆராய்கிறேன்... ஆராதிக்கிறேன் - உம்மை ஆமோதிக்கிறேன்- உம்மோடு விடை தெரியா விடையங்கள் பல... என்னுள்! அதி...