சினிமா - சினிமா!
அன்றும் இன்றும் அமைதிக்கும் நிம் மதிக்கும் மன மகிழ்வுடன் அயர்ச்சி போக்க பொழுது போக்கவும்.. களமாக இருந்தது அன்றைய - திரையரங்குகள் திரைப் படங்கள்! அரிதாரம் அதிகமாக இருந்தாலும் தெளிவான முகங்கள்! இனிமையான இசை வார்த்தைகள் புரியும் பாடல்கள்! எதார்த்த வசனங்கள் உணர்ச்சி பூர்வமாக உணர்வு பூர்வமாக சினமாக்கவும் - சிரிக்கவும்! கண் கூசாத ஒளிப்பதிவு இரைச்சல் குறைச்சலாக ஒலிப்பதிவு! ஐந்து அரை மணி நேரம் போ(ன)வது தெரியாது! ஆனா - இன்று இரைச்சலேடு இம்சையா இசை! கண் கூசும் ஒளிப்பதிவு செவி மறுக்கும் ஒலிப்பதிவு! அழகான முகங்கள் கூட அரிதார பூச்சில் அன்மை குறைக்கிறது வித்யாசம் என்கிற பெயரில்! வரிகள் குறைத்து வார்த்தைகள் புரியாது பாடல்கள்! தவறில்லை தப்பில்லை - நமக்கு அது - ஒப்பவில்லை! ஒரு நல்ல ஞாயிறு மாலை வாடிப் போனது! தேடிப் போன விளைவு.. எத்தனை யோ படங்கள் மறு முறையும் அதிக முறையும் பார்த்து இருப்பேன்! இப்ப - அப்படி யான படங்கள் வருவதில்லை! வேறு சில படங்கள் ...