Posts

Showing posts from August, 2024

ஜெர்மன் - கடை ஞாயிறு!

ஒரு ஞாயிறும் - இன்னும்  ஒரு திங்களும்.. ஒரு டசன் தினங்களும்  பாக்கி உள்ளன! உனை ப்ரிய .. மனமில்லாது என்று  சொல்வதற்கு இல்லை! இனி மறக்காது என்று சொல்ல.. இனிய ஜெர்மனியின் - ஜென்டில்   கண்டதும் அலோ! சொன்ன வயோதிக பெருமக்களும்! பாராது போன புது  ஜென்றிக் மறுமக்களும்  கால் சராய் கன்னிகளும்.. என்றும் நெஞ்சில்! மறக்காது - மறவாது.. பலதரப்பட்ட நாய்களும்  வகை வகையான.. பக்குவமா பிடித்த  அந்த பாங்கு - கரங்களும் கடக்க - நடக்க  கண் கொண்டு - கூட பார்த்தே ரசித் திருந்தேன்! பார்வையில் - வெளிப்  பாதையில்! சொல்வதற்கு நிறைய உண்டு  அதில் - சொன்னது கொஞ்சமுண்டு! நிறைய கற்றுத் தந்தது.. கற்க சொன்னது! விரை நடையும் - சிறு  ஒட்டமும்.. நீங்கா இடம் பெறச் செய்தன! விட்டு சென்ற என் வீட்டின்  நினைவுகளை - எழு பத்து  நாள்களாக - எனை மறக்கச் செய்தன - இங்கு என்னையும் நகரச் செய்தன! அந்த பறியாத செம்பருத்தி  ஒடியாத முருங்கை  சிரிக்கும் கொய்யா இலை பசும் வேப்பந்தலை  எப்போதும் உன்னாத  சப்போட்டா பழம்! அருகில் அருகம் புல்  அதனருகே சிறியா...

அமில வார்த்தைகள்..

அமில மாய்  விழும் வார்த்தைகள்.. திருத்து வதற்கு அல்ல! அது- திருந்து வதற்கும் யல்ல.. மனம்  திரும்பா  நீடித் திருக்க..!

அவனே - அதிகம்!

சூது வில் தோற்றவன்  சூழ்ச்சியால் தோற்றவனை விட.. சூழ் நிலையால்  தோற்ற அவனே - அதிகம்! காதலை இழந்தவன்  காசை இழந்தவனை விட.. காலத்தை இழந்த அவனே - அதிகம்! அன்பால் வீழ்ந்தவன்  ஆசையால் வீழ்ந்தவனை விட.. ஆணவத்தில் வீழ்ந்த அவனே - அதிகம்! சினத்தால் அழிந்தவன்  சிநேகத்தால் அழிந்தவனை விட.. சிந்திக்காது அழிந்த அவனே - அதிகம்! உறவால் ஏமாந்தவன் ஊரால் ஏமாந்தவனை விட.. உணராது ஏமாந்த அவனே - அதிகம்! ஊர் அறிந்து - உலகறிந்து.. ஒன்றும் அறியாதே  போன அவனே - அதிகம்! அதிகம் பேர் ஆன போதும்  இது போல் -  ஆகி போன அவர்களே அதிகம்..  என்பேன்! தேவா.

படித்துறை!

கருங்கல் படியே.. கருங்கல் படியே! கலங்காதே இப் படியே நீ!  கலங்காதே இப் படியே! மிகு கால் பதிந்த - படியே  பெரும் நீர் சுமந்த - படியே! அடர் பாசம் யெல்லாம் நெஞ்சோடு.. உனை - பாராது போவர்  நஞ்சோடு! இதை பார்த்து போவர்  பலருண்டு! ஆற்று படுகையில்  ஆள் இறங்க.. நீர்! - ஏற காத்திருக்கும்  சிறு படிகளாய்! ஆற்றின் இரு கரை யோரம்  இரு கரம் போல.. காட்சி யளிக்கும்  ஆனந்தமாய் பல் காட்டி! நீர் மிகு புரண்டால்.. பாதிக்கும் படி  மூழ்கினாலும் - வெளியேற  வழி சொல்லும்! நீர்! வற்றிப் போனாலும்  உள் இறங்க  உட்கார்ந்து பேச இடம்  காட்டும்! ஏனோ - என்னை மதியாது போவார்  அனா- மிதித்தும் மறந்து  போவார்! யாவருக்கும் உதவ உறங்காதே இருப்பேன்! இருந்தும் உயர் - எண்ணியது இல்லை! என்னை ஏற -  இறங்க  பயன் படுத்துவார்.. அதன் பின்னர்  ஏற இறங்க கூட பார்க்காது போவார்! துணி தோய்த்து துவைப்பர்  அலசி அடித்தும் வைப்பர்! காது உரசி - கால் உரசி  பேச அமருவர்.. பேச்சு விளங்காது போனால்  என் மீது குமுறுவர்! போகட்டும் போ.. என்னை பத்திர படுத்த வேண்...

தீ பெட்டி!

உசரம் கம்மிதான்  இருந்தும் - உச்சியில் உசிரை வைத்து  மண்டை அதை கொண்டை  போல்.. உரசி - உயிர் பெற  காத்திருக்கும் தன்மை! அதன் தனிமை பலதுவாய் சேர்ந்தே - சிறு  பெட்டியில் அடக்க மாக! அத்யாவசியம் அல்ல  அதன் தேவை! ஆனா - வாழ்வியல்  அவசிய தேவை.. கால மாறுதல்  அதன் தேவையில்(ன்) காரணங்களும் மாறுகின்றன! அதற்கு - நீர் ஆகாது - நமந்து  மரணிக்கும்! நெருப்பு ஆகா - எரிந்து  உயிர் விடும்! காற்றும் ஆகாது - உதவாது  பட படத்து மடியும்! வெளி பார்க்க - ஊமையாக  மௌனித்து விடும்! மண் பார்க்க.. பலரது கை பட்டு - மடிந்து  பரவலாக பதிந்து  மண்ணோடு தன்னைப்  புதைத்து கொள்ளும்! மடியவே காத்திருக்கும்  துடிப்புடன்! சூரியனுக்கு நிகர் இல்லை  சில நேரம்  சிறு சூரியனாய் உதவும்! எனது காலை நேரத்- தேவைக்கும் - தேநீருக்கும்  மாலை நேர பூசைக்கும்  பகையில்லா புகைக்க  உரசுவா னோடு - உரசாது என்னோடு - இட தொடை உரசி.. எப்போதும் உடன் இருக்கும்! அது இருக்கும் போது  மகிழ் வில்லை! இல்லாத போது  வருத்த மளிக்கும்.. யாரை கேட்க ஒரு வித படப...

புது வரவு.. புது கொடி!

அய்யா! இன்று - ஆக சிறந்த செய்தி.. நம் - இளைஞர்களுக்கு ! அண்(ண)ணாரது வெற்றி கழகம்  கொடி கண்டது! களிப்பில் வெற்றி உண்டது! இனி உலக மெல்லாம்  இளைஞர் உள்ள மெல்லாம்  மஞ்சள் சிவப்பு  வண்ணம் தான்.. ஆட்சி பிடிப்பது  எண்ணம் தான்! ஆகாயம் முட்டும்  உயரும் சமூகம் தான்! இனி- யானைகளாய் பிளிறி  மனம் பிடித்து ஆடுவர்.. மதம் பிடிக்காது! இதுநாள் வரை உள்ள  பிரச்சினைகள் - யாவும்  இனி இருக்க போவதில்லை  யாவும் - யாதும்! நல்லதை நினைத்தே நடுவோம் - நாற்று! அது- நேற்றைய கனவாகாது  போகட்டும்! உயர்வாக ட்டும்  அரசியலில் - புது  உயரமாகட்டும் நாளை! நம்புவோம் - நாமும்  பிற புது கட்சிகள் போல்  இல்லாது போக.. உழுவாது விளையாது  எதுவும் - உழைக்காது உயராது! அரசு இயல் சிறக்க.. புது - அரசியல் வேண்டும்  பிறக்க! இது- புது வகையா - அல்லது  பொது வகையா! இது பார்க்க தெரியாது  பார்க்க பார்க்க..  தெரியுமா!? பொறுத் திருந்து  பார்ப்போம்.. நல்லதை வரவேற்போம்  கை தட்டி! - அது நல்லதா யென  தெரியும் வரை.. பார்த்திருப்போம் கொஞ்சம்...

பழைய நினைப்பு தான்..

பாவா கடை  தாளிச்ச சோறு! பாய் கடை பருத்திப் பால்! டெண்ட் கொட்டாயின்  முன் - மூனு சீட்டு  உருட்டல் கட்டை உள் - மணல் குவித்து  தரை விரிப்பு இடை வேளையில்  கை முறுக்கும்  கமர் கட்டும்  சுட்டச் சோளம்  சுருட்டலா அவித்த கடலை குச்சி ஐஸ்  குருவி ரொட்டி  சீனி மிட்டாய்  இப்படி - பல.. பல.. நயா பைசா வில்  நொறுக்கு தீனி! சிலஷ ரூபாய் க்கு  அரக்கத் தீனி.. அதெல்லாம்  அந்த - ஐம்பது காசுகளின்  அராசகம்! அழிந்தே போயின  அழியாத நினைவுகளாய்.. தேவா.

உயர் சொல்லாய்..!

ஆடை யின்றி  பார்த்தாலும்.. அம்மணமாய்  அவமானமாய் - தெரியவில்லை.. அருவருப் பாகவும் இல்லை! அழகை ரசிக்க  அதை - அப்படி யே  ருசிக்க.. ஆடை எதற்கு!? எனக்கு அது- வெகு மானம் இல்லை! அர்த்தமாய் சொன்னது.. கத்தும் கிளியும்  கரையும் காகமும்  கூவும் குயிலும்  குதித் தோடும் குருவியும் கால்நடை களும்.. அது தன் வேலைகளை  நிறுத்தாதே  செல்லும்! அது சொல்லும்  பாசை புரியவில்லை  ஆனா - அதன் பாசம்  அனேக நேசம்  புரிந்து அது.. புரிய வைத்தது! உணர்வில்லா  உயிர்ச் சொல்லாய்..

என்ன செய்யும் ..!

அடித்து  நொறுக்கி  எரித்து - இ- தென்ன.. வன்மம்! அழிய - ஒழிய கண்ணீர் வழிய  இது என்ன.. எண்ணம்! மதம் வளர வளர்க்க - காக்க எத்தனையோ  வழி வுண்டு! அழித்து - ஒழித்து  பிறர் - விலக்கி  நீ! - எப்படி உயர்வாய்  உன் மதம் - உன்னதம்  எப்படி வளரும்! உயிர்களை உரமாக்கி உடமைகளை கரியாக்கி  உரைத் திடுமோ.. உன் மதம் - பெரி(ய ) தென்று.. நிலை உயர் வென்று! தாய் போல்  தாய் நாடும்.. தாய் மனம் ஒன்று! கருவுற்று கர்வமுற்று ஈன்ற தாய்  உனை காண! உதிரத்தில்  பிரித் தெடுத்தா ளோ!? இல்லை -  தொன்னையில்  வடித் தெடுத்தா ளோ..?! நீ!  செய்த - செய்யும்  செயலை கண்டாலோ காண நேர்ந்தா லோ.. மீண்டும் உனை சேர்ப்பாளோ! உன் அன்னை  இல்லை - சோற்றில் - ரொட்டியில் விசம் வைத்துப்  பார்ப்பாளோ..!

ஆனந்த வருத்தம்..!

இல்லந் திரும்பி  இரவு கழிய.. இனிதா இருக்க! மேல் கழுவினாள்.. தரை யெல்லாம்  உருண்டு யோடின... அத்தனையும்  பார்வை கள்! அழகிய பெண்ணின்.. ஆனந்த வருத்தம்!

ஜெர்மன்- மருத்துவ மனை..!

அனேக நாள்களுக்கு பின்.. அரை சதம்  ஐ - தச மது - அதுவும்  நாள்களாய் கழிய.. ஓரளவு பழகி போனது! ஜெர்மன் முழுவதும்  சுற்றா விட்டாலும்.. இருக்குமிடம் சுற்றியே பொழுது சுருக்கமாக  போன அது! - அன்று  கடையில் சொன்ன  விடையம் தொடர்ச்சியாக  இது- முந் இரவு  முன் இரவில்  சிற்றுந்து பயணம்! மழை வேறு  வழி யெல்லாம்  வலியோடு.. மகளின் முனங்கல்  செவிக்குள் சேதாரம்  விளைவிக்க.. இருந்தும் - கண்கள்  பரவசமாய் வெளி நோக்கி  இருள் விலக்கி.. வேடிக்கை! வேண்டுவன  வேண்டாத வை - என எதையும் தள்ளாது பருகி கொண்டை இருள் நனைத்த  மழையோடு.. அதை விலக்கிய  சாலை வெளிச்சத் தோடு! வேகமாக கடக்க  திட்டு திட்டாக  கட்டிடங்கள்.. திகட்டாத காட்சிகளாக! மருத்துவ மனை செல்லும்  வழியெல்லாம் - மனம்  ஒரு நிலையில் இல்லை! பரிசோதனை முடிந்து திரும்பி வர நள்ளிரவு ஆனது. பிரசவ வலிதான்! நேர மெடுக்கும்  என்பத ஆல். தேவை இல்லாது - உள்  நோயாளி ஆக - எளிதில்  அனுமதிப் பது இல்லை. நள்ளிரவு தாண்டியும்  நங்கு இருட்டியும் அன்று தான் பார்க்க...

நெஞ்சு கணத்தது..!

அண்டை மாநிலத்தில்  அகால நிகழ்வு! நிலச் சரிவில் - நீர்  ஆதிக்கம் சேர.. நீள் சரித்திர நிகழ்வு அது! நேற்று இருந்த அது நின்ற அது - குன்றாய்  கும்பலாய்.. இன்று அது இல்லை! நாளை யது தட்டையா அல்லது - குட்டையாய் இயற்கையின் நீள் நாக்கு  அதுவும் பேச - சுட தொடங்கி விட்டது போல்.. மரணங்கள் பலவிதம்  ஆனா - இது கொடுரம்! இருக்கோமா - இல்லை யா  என்பதை - தெரிவிக்காது அறிவிக்காத ஓர் நிகழ்வு! இயற்கை யை - நீ அழித்தால்.. அது நின்று - வெல்லும்! அது உன்னை அழிக்க  நினைத்தால்.. நிதர்சனமாய் - நன்று  கொல்லும்! அதன் எண்ணங்களில்  எண்ணிக்கை தெரியாது! பாலர் - பாவிகள் தெரியாது! பொறுமையின் உதாரணம்  இப்படி - பொறுக்காது  சீறுமா!? சினங் கொண்ட சிங்கம்  மதங் கொண்ட யானை  குணங் கெட்ட பெண் பொறுமை இழந்த மண்.. பலி அதிக மாக்கும்! நாம் - இன்னும் அதில்  பலவீனம் தான்! மீளா துயர் இது யாருக்கு ஆறுதல் சொல்ல.. இது - யார் குற்றம்?! யவர் தடுக்க இயலும்.. எது தடுத்திருக்க வேண்டும்  காப்பவர் மேய்ப்பவர்  யாவரும் - அங்கு  அவர் தம் கண்ணுக்கு  தென்படவில்லை.. இந...