காமத்தின் கதவுகள்..!
காமத்தின் கதவுகள்.. கண்கள்! மூடித் திறக்கும்.. திறக்க மூடும்! பார்த்து பசியாறும்.. சில நேரம்- பார்த்தே.. பசிவூறும்! வாயிற் தாண்டி வேடிக்கையாய் போனாலும் வாடிக்கை மாறாது வந்து விடும்! அது- மனதில்(ன்) இருக்கை போட்டு அமரவில்லை.. நார் கட்டில் போட்டு உறங்குகிறது! பேசிப் பழகும்.. பேசாதும் பழகும்! எதிரில் பேசுவதை விட.. எண்ணத்தில் பேசுவது அதிகம்! காவல் தாண்டும் காதல்- அதையும் தாண்டும் இது- காமம்! கால் விலக்காது - அதன் நெற்றியில் புள்ளி வைத்து.. தலையில் அடித்து கொண்ட நாளுமுண்டு! முழுதும்- வெளி சொல்லாது என் - புத்தி தாண்டாது! இம் மொழிக்கு எழுத்தில்லை.. மெய் காண - உயிருண்டு! ஆறாய் ஓடும்.. அருவியா கொட்டும்! அள்ளி அருந் தீயும் முழ்கி குளித்து எம்- அதன் ஆசை தீரவில்லை.. ஆர் வம் குறைய வில்லை! கலையா நெஞ் யோரத்தில் அலை அலையாய்.. கிட்டங்கியா கிடங்கா தேங்கிய அது குறையவில்லை.. ஆவல் தூண்டும் நூலகமாய்.. அத்தனையும் படிக்க முடியவில்லை எல்லோரும் வேறு வேற...