Posts

Showing posts from April, 2018

வைகரை வருத்தம்!

வைகரை வருத்தம்...! வைகரையோரம் வயதான நாணல் ஒன்று  வருத்தமாய் நின்றது! கண் யழுது கலை யிழந்து... தலை குனிந்து! தலை குனியும் நாணலே கண்ணில் ஏன் வீக்கம் கரையில் என்ன தாக்கம் தாழ்ந்து வினாவினேன் தாமதமாய் பதில் வ(த)ந்தது! நண்பா- தாகத்தில் நா இருக்கேன் தர்க்கத்தில் நீ இருக்க... மோகத்தில் உம் பேச்சு சோகத்தில் எம்மூச்சு பாவம் செஞ்சது நீ சாபம் பெற்றது நா! நன்றி மறந்தவன் நீ அன்றி செய்யாதவன் நான்! நாணல்தான் நா நானுவேன் சில நேரம் இப்ப-கூனிக் குன்னுகிறேன் பல காலம்... கரையோரம் என் இனம் காணாமல் பன்னியது உன் இனம்! வேகுது என் மனம் வெப்பத்தில் உன் இனம்! என் வேதனைகள்  வேறு மாதரி... இங்கிருந்த அழகும் அரணும் எங்கே?! வரும் வழியில் பாலம் பார்த்திருப்பாய்- அதன் மேல் நின்றால் இருகரையெல்லாம் என் முகம்! இங்கிருந்த ஆறு எங்கே அதன் வளமெங்கே-என் நலஞ் சொன்ன பேர் எங்கே? கழிவு நீர் கால்வாயா-இது! கஷ்டகாலம் என் முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள்-அதை நீங்கள் கெடுத்து வைத்தீர்கள்! கனுக்கால் தண்ணீ ஆனாலும் கானக்கிடைக்காத அழகு  இந்த ஆறு! கட்டை வண்டி பாதை யாக்கி...

கல்லனண - 2

பாகம் 2. கல்லணை பிறந்த தெப்படி... கரிகாலன் வருந்தியது அப்படி! வெள்ளத்தில் பயிர் அழிவதைக் கண்டான் வேதனையில் வெந்தான்! வெயிற் காலத்தில் நீர் யின்றி பயிர் கருக கண்டான் நொந்தான்! தீர்வாய் தீர்க்கமாய் ஒர் ஆனை! - உடனடி நீர் தேக்க ஒரு அணை! பறைச் சாற்றி முரசுக் கொட்டிச் சொன்னான் பின்னர்- வெற்றிப் பிறைச் சூடிக் கொண்டான்! வெள்ள காலத்தில் நொடிக்கு இரண்டு லட்சம் கணயடி நீர்வரத்து காவரியில்! கால் பதிக்க-இழுக்கும் அதுவே அரிச்சுவடியாய் கல் பதித்து தடுத்தான் அதன் மேல் ஒவ்வொன்றாய் கல் அடுக்கி எடுத்தான் தடுத்தான் வரும் நீரை வென்றான்- அணை கண்டான் கல்லணை பெயர் கொண்டான்! 1080 அடி நீளம் பத்தாள் படுத்த அகலம் மூன்றாள் உயரம்! முடியுமா அந் நாளில்? முடிந்ததே! அதுவும் முடிந்ததே பயன்பெற... 16 லட்சம் ஏக்கர் பாசன பயன்பாட்டிற்கு வழிகாட்டிய முப்போகம் உயிர்வூட்டிய செம்மல் கரிகாலன் பெருவளத்தான்! எப்பயனை எதிர்பார்த்து அப்பலனைக் கொடுத்தான்! சிவப்பயனே அது நாம் பெற்ற தவப்பயனே! தவபுதழ்வனே-சோழ முதல்வனே-எம் மூத்தோனே-உம்மைக் கண்டு அகம் வேர்த்தோமே.. கானும் போதெல்லாம் மனம் கல்லாய் க...

கல்லனை-1

கல்லணை...! கல்லால் கட்டப்பட்ட அணை! காவிரி குறுக்கே வெள்ள பெருக்கை பெரும் நீரை... கல் யானையாய் நின்று தடுக்கும் அணை தடுப்பணை! இதற்கு இல்லை ஈடு இணை... சோழப் பாட்டன் கொடுத்த கொடை கொடுப்பினை! அவன் காவியத்தலைவன் முதுப்பெரும் கலைஞன் மூத்தச் சோழன் தன்நிகரில்லா தமிழன் சத்தியம் காத்தவன் சரித்திரம் படைத்தவன் விசித்தர மானவன் சான்றோர் கூற்று சரணமாய் ஏற்று சைவத்தை பற்றி சிவத்தைப் போற்றி ஞாயறாய் வாழ்ந்தவன் திங்களாய் திகழ்ந்தவன்! வேளா(ல)ன் வேதனையின்  வேர் அறிந்தவன் மழை இல்லா வேளையிலும்  பிழைஇல்லா  நீர்த் தேக்கி பயிர்தழைக்க அணை கட்டியவன் தமிழகத்திற்கு  தடுப்பணையை தகப்பனாய் அறிமுகப்படுத்தியவன்! ஈர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருபது நூறாண்டுகள் ஐம்பது தலைமுறைகள் 2400 சித்திரை 24000 பௌர்ணமி கள் கண்ட அணை... என்ன சொல்லது அந்த தெம்பை எப்படிச் சொல்வது அந்த பண்பை கல்லால் கட்டிவைத்தான்  தன் அன்பை! அணையாய் அழியாப் புகழாய்-யாரும் அறியா புதிராய்... ஊர் மகிழ உணவு பெருக பயிர் செழிக்க வளம் கொழிக்க மழைபெற வான்மகிழ வரப்புயர மக்கள்  ...

கருவறை கதறல்...!

கருவறை! இது-காணாது யாருமில்லை... கண்டதாய் நினைவுமில்லை! நிலைத்து நிறந்தரமில்லை என் நிம்மதி குறைந்ததுமில்லை! முத்தாய் முளையாய் மொட்டாய் சொட்டாய்... தொடக்கம் அங்கே அகரமாய்.. ஆணந்தமாய் சொல்வதற்கு அறியபட வில்லை-நினைவு தப்பின தினங்களை அதிகம்! வாழ்ந்தது ஒருமுறை வகை அறியா வழிமுறை! ஆதிவுரை இறுதிவரை கானாது மறு கரை! பிறைக்கானா  இடம் ஒளிக்கானா மடம் குரைவான விடமானதால் குகையானதே! மிகை வொன்றுமில்லை எடுத்துச் சொல்ல-அது மியூசியம் போல் அல்ல! மிருதுவான தடம்  தீபகர்பமாய் நீர்சூழ மெல்லிய திசுவோடு சிசுவாய்...! உருவான காலம்முதல் உத்திரவாதம் இல்லாமலே போச்சு! ஆறுமாதம் காலம் அறுபது நாள் ஓலம்... நஞ்சோடு கொஞ்சியே நலஞ்சேர்த்தே உவமையாய்  ஊமையாய் உயிரோடு நிலையாய் ஏதுமறியா எதுவும்  தெறியா நான் யாகிய வேளையில் வேதனையின்  வலி-அதன் ஒலி மட்டும் ஒலித்துக்கொண்டே... கண் யிருந்தும் பார்க்காமல் வாயிருந்தும் பேசாமல் கைக்கால் கட்டி வைத்த கதியாய்! வெளிச்சத்தம் ஒலி கேட்கும்-உண்மையா நன்மையா உணரா(மல்) செவி கேட்கும்! விரிசல் யின்றி விரிவாக்கம் உரசல் இன்ற...
இதை மறப்போமே ஆனால்- மன்னிப்பில்லை நமக்கு மனித உயிர்களுக்கு விலை இல்லை... யார் சொன்னது?! நிர்ணயத்து விட்டார்கள் விற்பனை பிரதிநிதிகளும் கூட லேபல் யில்லா  மார்கெட்டிங் ...! பிணம் தின்னும் கழுகுகள்... படித்தோம்! - அதில் (அதை)பணம் பன்னும் வல்லூர்கள்... பதறுகிறோம்! நடந்து முடிந்ந விசயத்திற்கல்ல -இறந்து போன முதியோருக்காக அல்ல மறந்து போன மனிதம் இன்று  மரணித்தும் போனதா...! மனித உடல் மண் திங்கும் சுடலை பிணத்தில்  பணம் பன்னும் பேராசை பேய்கள்! இவர்களை எத்தோடு ஒப்பிடுவது ஒப்பற்றவர்கள் தரமற்ற வாழத் தகுதியற்ற ஈனர்கள்... இறக்கமற்று நடமாடும் சவங்கள் சவப்பிணங்கள்... அநாதைகளும் ஆதரவற்றவர்களும் உம்போல்  அருகதையற்றவர்கள் அல்ல! உத்திரமேரூர் பாதிரிகளும் அவர் மாதரிகளும்... ஈன இழி ஜென்மங்கள் பாவச்சின்னங்கள்! பாவத்தின் சம்பளம் படைத்தவனுக்கு தெரியும்- உனக்கும் கிட்டும் உண்மை ஊமையாய் மட்டும்! ஊடகங்களும் ஊதாரி கூட்டங்க ளும் வேடதாரி பட்டங்களுடன் மனம் ஊனமாய் போனது ஏன்?! இன்னும்-மௌனமாய்  இருப்பது(ம்) ஏன்? அண்டை மாநிலத்தில் பக்கத்து நாட்டில்...
உலகத் தண்ணிர் தினம்! தினம் தண்ணிர் உபயம்! உலகத்தில்... நிலத்தடி நீரும் வற்றிப் போகுதே-நாளை என்ன? என்பயம்! நம்மை  காக்க வரும் நன்மை காக... நீரின்றி யமையா உலகு! நீர்த் தேவை நீண்ட தேவை! ஆக- சிக்கனம் தேவை இக்கனம் உதவ... நீர் சேமி-நித்தம் அது பூமியின் இரத்தம்! முத்தாய் நீர் சேர்க்க சொட்டாய் சேரும்-நாளை சொத்தாய் மாறும் பார்! வீணாகா நீர்-நாளை விளைச்சலுக் காகும்! கரிசனை காக்க-நாளை கரிசலைக் காக்கும்! இது தகவலுக்கு அல்ல நம் தலைமுறை க்கு... நீர் பயிருக்கு உயிர் நம் வாரிசுக்கு உயர் ஆகாய நீர் ஆழத்தில் சேர்-அந்த ஆதாயத்தின் வேர் நாளை- ஆலயத்தின் நேர்! தனிமையில் சிந்தீர் ஆனா தண்ணிரை நிந்தீர்... முன் யோசனை முன்பு சொன்னது தான்-நம் மூத்தோர் தந்ததுதான் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்! நட்ட மரம் இட்ட உரம் - அது தொட்ட அறம் காப்போம் மனிதநலன் சேர்ப்போம்! நித்தம் சேமி-அதில் திமிர் காமி நிலத்தடி நீரே... நிறைவான சாமி! உலகத் தண்ணிர் தினம் தினம்  - தண்ணிரே உலகை காக்கும்! இது தகவலுக்கு அல்ல நம் தலைமுறை க்கு...! அன்புடன் தேவா.
முந்திரிக் காட்டுத் தோப் பிலே... முள்வெளி ஏதுமில்லை முன் மதிய வேளையிலே... விழுந்த பழ மெடுக்க அந்த- இழந்தபழ சிகப்பே! இரு- மாதுளை ஒருசேர கழுத்தோர முகப்பே! காதோர கருத்த முடியும் எருக்ஞ் செடியும் அருகருகே கண்டேன்! நீ-குனிந்தெடுக்கும் வேலையில் கண் துளைத்தெடுக்கும்... வொ முகப்புச் சீலை விலகும் போதெல்லாம் யென் முகரயை எங்க வக்கே...! பாயப் போட்டு படுக்கல னாலும்-மனம் மேயவிட்டு படுத்தது புள்ள...! தடித்த உதடும்-யது கொடுத்த அசைவும் உப்பில்லா கஞ்சிக்கும் ஊறுகா யாச்சு... (அசைவ மாச்சு) கருத்த மனம் கறை படிஞ்சிப் போச்சு-விழுந்த பழம் உன் மடிநெரஞ்சு போச்சு! பெருத்த வயிறு இடையில் திரித்த கயிறு இட மடிப்பு ரெண்டுக்கும் கெண்டைக்கால் தண்டைக்கும்... எழுதி வெக்கலாம் தோப்பு! - எனக்கு தோதில்லயே மாப்பு! ஒன்னப் போலத்தான் இந்த தோப்பும்... பாக்கமட்டும் வசதி யிருக்கு தோப்புக்காரன் அசலூரு ம்ம்ம்... நா இன்னும் உசிரோடு! தேவா.
உட்டா லக்டி வீடுகட்டி கூடுகட்டி கூட்டுக்குள்ள அடுப்பு மூட்டி... அடுப்புமேல பானை வைச்சு வச்சா தாண்டி பொங்கல... இலவசத்தல (பு)தைச்சா தாண்டி நம்மளை...! கரைவேட்டி கட்டிக்கிட்டு கட்சி க்கொடி பிடிச்சு க்கிட்டு காரியமெல்லாம் முடிச்சு க்கிட்டு காசுப் பணம் சேத்துக்கிட்டு கத்தறான் பாரு ரோட்டுல்ல-தூத்துக்குடி கதவடச்ச கேட்டுல்ல...! பொம்பள பாரு டீச்சரு- அனுப்பி வைச்சா மேட்டரு ஆளப்பாரு கீசரு... அவ அகப்பட்டு கிட்ட சீசரு! ஆளக் காணோம் ஆளுநரு-அவர் விட்டார் பாரு பீட்டரு... விசாரணை க்கோர் சீட்டு எடு! ஐபிஎல் மேட்ச் யில்லை ஐம்பதாயிரம் போச்சு யில்லை... ஆளாப் பறக்குது கூட்டம் அத அடித்து நொருக்குது சட்டம்! விலைவாசி குறையவில்லை விவசாயிக்கு சோறில்லை ஆத்துல மண்ணில்லை பேச்சில்ல குறையில்லை பேரவையில் முறையில்லை! தண்ணீர்(காவிரி) மட்டும் வரவேயில்லை! வில்லங்க மில்லை விண்வெளி யில் விவாதிக்கிறான் புல்வெளியில்... போடறான் பாரு சத்தம் பொழுது போகுது நித்தம்... எத்தியோவாப்பா-இது பொத்தியே காப்பது மது! அரசுக்கு எதிரா யுத்தம் பங்கு தந்தா சித்தம்... சங்கு தாண்டி-நமக்க...

இன்னும் போதவில்லை யே...!

அவசர யுகத்தில் பொறுமை யிழந்தோம்! பொறுமை யின்றி பொருள் யிழந்தோம்! நெல்லுக்கு நாள் குறைத்து... நல மிழந்தோம்! மரம் அறுத்து மழை இழந்தோம்! விளைச்சலுக்கு ஆசைப்பட்டு விதை யிழந்தோம்! மகசூல் பெருக்கி மகிமை யிழந்தோம்! தேடலில் தொலைந்து தேக மிழந்தோம்! சோம்பேறி யாயிருந்து பொறுப்பை யிழந்தோம் நாடோடி வாழ்வில் நட்பிழந்தோம்... நாகரீக வாழ்வில் நன்றி யிழந்தோம்! தனிமையில் தங்கி தன்னை யிழந்தோம் ஆசையில் மயங்கி மதி இழந்தோம்! நிலம் மறைத்து நீர் இழந்தோம்... நிலை மறந்து நிதி யிழந்தோம்! போரிட மறந்து(பயந்து) வீர மிழந்தோம் கூட்டுறவு நாடா பெருங் கூடு யிழந்தோம் தீமைக்கு அஞ்சி திமிர் யிழந்தோம் தீராத காமத்தில் காதல் இழந்தோம்! வேறு பல கற்க விளையாட்டை யிழந்தோம்... போதை நோக்கி பயணத்தில் பாதை இழந்தோம்! தொலைக்காட்சி தொடர்பில்... பொழுதை யிழந்தோம் போறாத காலத்தில் பொழைப்பை யிழந்தோம்! வேதனைக்கு பயணப்பட்டு வேர்வை யிழந்தோம் தீரா மோகத்தில் தனித் தமிழ் இழந்தோம்! துரித உணவில் சுவை யிழந்தோம் மருத்துவர் நாடி சுய மரணத்தை  இழந்தோம்! மாற்றம் வேண்டி மன மிழந்தோம் தனி ...
தீதும் நன்றும் பிறர் தர - வாராது... நன்றாய்- மனதில் நின்று ஒன்றினைக் கொன்று மற்றொன்று வெளிவரும்! தெளிவுரும் பின்-அது தீதா - நன்றா(ய்) திறம்பட திரும்பிவரும் நமக்கு வரமாய்! உள்ளிருப்பதும் உமிழ்வதும் - அதுவே! வார்த்தை வார்க்கும்-நா அது தீ போன்றது ஆக்கும் அது பலவாக்கும்! இணையாய் துணை சேர்க்கும்... உயர்வாய் உயர் நிலையாய்! அழிக்கு மது பலவாறு சேர்க்கும் சேறு நன்றியை நடப்பை உறவை உறுதுணையை உண்மை யை உன் தன்மையை! மொழி யழிக்கும் மொழியும் உனை(யும்) அழிக்கும்! அறிந்துகொள் நீ அடைக்கிக் கொள்- நாஅடக்கம் தன்னடக்கம் அது தரம் கொடுக்கும்! வலி யென்பது-வாழ்விற்கு வழி போன்றது! உன் வலி நீ உணர்ந்தால்... அவ்வேதனை நீ அறிந்தால் இன்னும் வேர்கிறது உனக்குள் உணர்வோடு உயிரோடு இருக்கிறாய்! பிறர்வலி தன் வலியாய் நீ அறிந்தால் வேதனை வேறில்லை உனக்கும் எனக்கும் வேற உவமை யில்லை உணர்ந்தால்... மனிதனாய் மாறாது இருக்கிறாய்! மனிதம் இருந்தால் மரணம் நெருங்காது... இறந்தும் வாழ்வாய்! இல்லையேல் இருந்தும் சாவாய்! பல உள்ளங்களில்... சில இல்லங்களில்! தேவா.
மறந்தோமே நாம் துறந்தோமே... ஆற்றுக் குழிவெட்டி ஊற்று நீர் மோக்க சிறு தே(ங்) சிறட்டை காலி கை டப்பா நீர் தேக்க! பித்தளைக் குடம் மண்பானை நீர் சேர்த்து இருபது நிமிடம் இருப்பிடமாகி... இளவட்டம் தோள் தூக்க இளையவள் இடை தாங்க மூத்தவள், தலை சுமக்க ஆற்று மணலில் பாதம்பதிய அன்றாட பொளப்பாச்சு ஆயினும் உடற் சிறப்பாச்சு! மாசில்லை மருக -ஒரு தூசில்லை -கிடை(க்கும்) தண்ணீருக்கு காசில்லை! இதுப் போல் துன்பமில்லை தோள் பெருத்தது இடை வலுத்தது இன்றி யமையா பிரசவம் சுலுவாச்சு... அது சுகமாச்சு! மருத்துவ சே(தே)வை மகத்தானது - அது எப்பவாவது மட்டும் மருந்தானது! இன்று மருந்தே விருந்தானது... ஆறே இல்லை -பின் ஊற்றுக்கு எங்கே போவது! அன்று சிறப்பானது இன்று சிரிப்பானது! மனம் வெட்கி... தேவா

நீ இல்லாத போது...

நீ இல்லாத பொழுது எப்போதும் போல் இல்லை யே... உன் நினைவு தாங்கும் போதும்-உன் நினைப்பு தூங்கும் போதும்... துயரக் கட்டிலில் துயில்வதில்லை! துடியலோடு சிறு காரியங்கள் நடைப்பெற்றாலும்... நடைபெறாது போனது உன் நினைப்பை அழிக்கும் முயற்சியும் அதற்கு நா(ன்) மேற்கொண்ட பயிற்சியும்! பசி போல் தூக்கம் போல் - பகிர்ந்தளிக்கும் உன் நினைப்பு உணர்வுகளாய் - ஊடுருவி போனது உடலுக்குள்...! உண்மை தான் காதலும் கஷ்டமும் விலகா திருக்கும் மனதில் - தினம் வசித்திருக்கும்-சிலநேரம் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கும் விசித்திரமாய்! வினோதம் விண்ணுக்குள் மட்டுமல்ல... கண்ணுக்குள்ளுந்தான்! தேவா.

என் விளையாட்டு!

கோல்ப்-ம் டென்னிஸ்-ம் பழக்க மில்லை... சொல்லப் போனால் பள்ளிப் பருவம்வரை பார்த்த தில்லை! நமக்கு- கிட்டிப் புல், பம்பரம் வீதி சமைத்தோம்... குண்ட டித்தோம்! குழி நோண்டி-கோல் யடித்தோம்! கபடிக் கபடி பாடிப் பாடி-மூச்சிரைத்தோம் அக்காவோடு தாயம் தங்கையோடு பாண்டி யாடினோம் -டயர்வண்டி விரும்பி யோட்டினோம்! பள்ளியில் கிரிகெட்டு மட்டை யேது கட்டைதான் பரீட்சை அட்டைதான்... காகித பந்து-காய்ந்த சோளத் கட்டை ரப்பர் பந்து கூட நாள் சென்றபின் தான்! அஞ்சு பைசா அளவானது ஐம்பது பைசா இருந்தா பணக்காரனாக்கும்... அஞ்சு பைசா-மிட்டாய் அன்றை பொழுது-ம் இனிப்பாய் போகும்! ஒரு சோளக் கதிரு நாளெல்லாம் கூடவரும்! குச்சி ஐஸ் குருவிரொட்டி சக்கர மிட்டாய்- தாத்தா கடை பேமஸ்சு! ஆச்சி வந்தாலும் மாமா வந்தாலும் -அந்த வாரம் சேரக் கிடைக்கும்! ஆசிரியர்கள் பல விதம் தலையில் கொட்டுபவர் வயிற்றில் கிள்ளுபவர் பின் புஜத்தை திருகி... மற்றொரு வர் அடிஸ்கேலை திருப்பி யடிக்கும் ஆசிரியை! எப்படி ஞாபகம் இருக்கு பாரு... வூட்டு பாடம் மறந்துபோகும் விருந்தோம்பல் தொடர்ந்து நடக்கும்! பனிஷ்மென்ட் பழகிப் போச்சு தி...

இரு மனதாய்...

இரு வேறு கருத்தாய் இருக்கு உறுத்தலாய்... மனம் இடதா வலதா அலையுதே! தூத்துக்குடியில் போராட்டம் துக்கமாய் போனது உயிரோட்டம்! செர்லைட் ஆலைக்கு எதி்ராய் செயலிழந்து நின்றோமே புதிராய்! வசதிக்கு வாங்கி சாப்பிட்டு வயிறு எரிச்சல் யென்றால் எப்படி? விற்றவன் என்ன செய்வான் விட்டவனை என்ன செய்ய... யார் மீது குற்றம்! விற்றவனா -உற்றவனா சட்டம் என்ன சொல்லது... ஜனங்கதான் சந்தியில் நிக்குது! பிரச்சனை எங்கில்லை எதில் யில்லை... பிரச்சனை க்கு வேர் எது தூத்துக்குடிக்கு மட்டுந்தான் பாதிப்பா அங்கு மட்டுமே இழப்பா! திருப்பூர் ஈரோடு கோவை சேலம் திருச்சி கரூர் மாவட்டங்கள் சுகாதாரமாய் இருக்கா? நீர் பிரச்சனை இல்லையா நீதி பிரச்சனை இல்லையா... மாசு பிரச்சனை மாறிவிட்டதா! மதுரை சென்னை மற்ற மாவட்டங்கள் சுகாதார மனாதா... சுக போகமா வாழுதா? அன்று அனுமதித்து யார்- ஆதரித்தது யார்? இன்று- எதிர்ப்பவர் யார் எதிர் பார்ப்பவர் யார்? வேலைக்கு சேர்ந்தது அங்குள்ள மக்களே! இடை நிறுத்தத்தில் வேலை கேட்டு போராட வில்லையா... அன்று தெரியவில்லையா கம்யூனிஸ்ட்-களை கம்முனு யூஸ் பண்ணின வர்களே! மாசு கெட்டுவிட்...

இனி ஒரு விதி செய்வோம்!

இனி ஒரு விதி செய்வோம்! அதை மதியால் முடிவு செய்வோம்... கண்ணீரையும் தண்ணீரைம் வீணாக்குவதில்லை! நெகழியையும் அதன் நிழலையும் நிராகரிப்போம்! அந்நிய பானத்தை அருந்தாது ஒழிப்போம்! (ஒதுக்குவோம்) உள்நாட்டு பானத்தை உயர்வாய் போற்றுவோம்! பாக்கெட் தீனியை பக்குவமாய் ஒதுக்குவோம்! பற்றயற்ற வாழ்வை ஒப்பற்று ஒழுகுவோம்! அந்நிய மோகந்தனை அழிந்தது யென உணர்வோம்! கட்டாய இலவசங்களை கசந்ததென ஒதுக்குவோம்! வாழ் வதாராமாய் வயல்தனை(விவசாயம்) உயர்த்துவோம்! தும்பை விட்டு வால் பிடிக்கும் செயலை ஒருபோதும் செய்யோம்! கல்வி கட்டண உயர்வு அங்கு கல்லாது ஒதுங்குவோம்! அரசு கல்வியில் இனி ஆதாயம் தேடுவோம்! (தரம் உயர்த்தி) தேவைக்கு தவிர-இனி தேடுதல் குறைப்போம்! சாதிக்கா(ன)த அரசுதனை இனி சாடி வுரைப்போம்! வெள்ளைச் சர்க்கரை வெறுஞ் சாதி சேர்க்காது இ்ருப்போம்! சாவோ நோவோ- அரசு மருத்துவம் பார்ப்போம்! உழலுக்கு போர்வையும் நேர்மைக்கு சால்வையும் போர்த்துவோம்! நம்(ன்)மை உயர்த்தாத அரசை இம்மை உயராது தடுப்போம்! மண்ணின் மைந்தர்களை மறவாது இருப்போம்! அறந்தவறும் அரசியல் வாதிகளை அடியோடு அனுகாது தவிர்ப்போம...
எழுத வேண்டாமுனு நினைச்சேன்... என் எண்ணத்தை நானே அழிச்சேன்! இங்கு- எல்லாத் தலைவர்களும் தன்நல மிக்கவர்களாய் நல்ல வர்களாய்... தேடி ஆப்படவில்லை! நெருப்பின் நிழல் சுடுமா! அப்படித்தான் இவர்களின் நிலையும் நிழழும்... பொருப்பற்ற பேச்சு வெறுப்புற்றுப் போச்சு! நிதான மில்லாத நிர்வாகமும் அல்லாத எந்த நிவாரணமும் இல்லாத நினைக்க மறுக்க அவதூறு வார்த்தைகள் எதிர்க்க மட்டுமே... கோர்க்க அல்ல! எண்ணத் தெளிவற்ற பேச்சு எதற்கு இந்த மூச்சு... பணம் பண்ணும் விதத்தில்-பத்து சதவிகிதம் கூட பற்றில்லை நம்மீது! எப்பேர் பட்ட பூமிது இதற்கு இவர்கள் தான் பினாமி(யா)! போனால் போகட்டும் விடவா முடியும்... என்றாவது ஒரு நாள் இந்த கதையும் முடியும்! நம்மால் ஆவதென்ன... அலட்சியம் வேண்டா நண்பர்களே அன்பர்களே இளைஞர்களே! ஆவதும் அழிவதும் இயல் பென்றால்... இது அழியட்டும்! அரசியல் யற்ற அமைப்பு அசிங்கமற்று சமைப்போம்! நாம் ஒன்றாய் இணைவோம்-புது இயக்கமாய் ஆக்குவோம்... புதிதாய் தாக்குவோம்! ஒரு குடையின் கீழ் ஓர் தலைமை யோ அல்லது ஒரு குழுவோ கூடி விவாதிப்போம்! தேசம் முழுவதும் இல்லா விட...
அன்னாந்து பார்ப்பர் அடியில் இருப்பது மறப்பர்(துறப்பர்) ஆளாய்ப் பறப்பர் ஆவதில்லை மறுப்பர்! எட்டாது கனிக்கு ஆசைப்பட்டு கிட்டியதை இழப்பர்... என்ன சொல்வது பட்டத்து யானையும் பரிவட்டமும்... கண்ணுக்குத் தெரியும்! பாகனும் பரிதவித்து போனவனும் கண்ணீல் படா நெஞ்சைத் தொடா! அவசர யுகத்தில் அனுசரிப் பில்லை அது சரி! யா(நா)மே நமக்கு பகை... பொது நாட்டங் கொள்ள ஏது வகை! தேவா.

யாதும் ஊரே...

யாதும் ஊரே யாவரும் கேளிர் கனியர் சொன்னது! பொது கிணறு யில்லை பொதுக் குள மில்லை குழா யடி சண்டை யும் தீரவில்லை... ஆற்று நீரை அளந்துங் கூட அவல நிலை... அதிகார பங்கு ஆதாரமாய் இங்கு! அண்டை மாநிலத்து நட்பில்லை அனுசரிக்க சிறிதும் துப்பில்லை! பிறந்தார் வளந்தார் துறந்தார் மறந்தார் இருந்தார் இறந்தார்! மறுப்பேது மில்லை-இது மாறப்போவது மில்லை! இன்னும்மா கனியார் நீர் சொன்னதை கேட்பது...  (கேட்பதா) கேளிக்கை யாய் பார்பதா! தேவா.

என் நினைப்பு....!

எழுத வேண்டாமுனு நினைச்சேன்... என் எண்ணத்தை நானே அழிச்சேன்! இங்கு- எல்லாத் தலைவர்களும் தன்நல மிக்கவர்களாய் நல்ல வர்களாய்... தேடி ஆப்படவில்லை! நெருப்பின் நிழல் சுடுமா! அப்படித்தான் இவர்களின் நிலையும் நிழழும்... பொருப்பற்ற பேச்சு வெறுப்புற்றுப் போச்சு! நிதான மில்லாத நிர்வாகமும் அல்லாத எந்த நிவாரணமும் இல்லாத நினைக்க மறுக்க அவதூறு வார்த்தைகள் எதிர்க்க மட்டுமே... கோர்க்க அல்ல! எண்ணத் தெளிவற்ற பேச்சு எதற்கு இந்த மூச்சு... பணம் பண்ணும் விதத்தில்-பத்து சதவிகிதம் கூட பற்றில்லை நம்மீது! எப்பேர் பட்ட பூமிது இதற்கு இவர்கள் தான் பினாமி(யா)! போனால் போகட்டும் விடவா முடியும்... என்றாவது ஒரு நாள் இந்த கதையும் முடியும்! நம்மால் ஆவதென்ன... அலட்சியம் வேண்டா நண்பர்களே அன்பர்களே இளைஞர்களே! ஆவதும் அழிவதும் இயல் பென்றால்... இது அழியட்டும்! அரசியல் யற்ற அமைப்பு அசிங்கமற்று சமைப்போம்! நாம் ஒன்றாய் இணைவோம்-புது இயக்கமாய் ஆக்குவோம்... புதிதாய் தாக்குவோம்! ஒரு குடையின் கீழ் ஓர் தலைமை யோ அல்லது ஒரு குழுவோ கூடி விவாதிப்போம்! தேசம் முழுவதும் இல்லா விட...

அகல்யா!

அகலிகை! அகலிகை! அழகானவள் அறிவானவள் அடக்கமானவள்... பிரமனின் நேரிடைப் படைப்பானவள்! பேரெழில் உருவம் வில்லாய் புருவம் வியப்பூட்டும் பருவம் விரிந்த அதரம் கச்சைக் கானாத தனம் இச்சைக் கானும் தினம்! ரிஷிபத்தினி-சுவைக்க ருஷிவர்த்தினி! மாமுனி - சினம் அவரது மகா பிணி கௌதம முனிவர் அவளது இனியவர்! துணைக்கு மட்டுமல்ல அவரது பணிக்கும் இணையானவள் இல்ல மனையானவள் இளம் மங்கையானவள் புனித கங்கை போன்றவள்! கற்புக்கு உவமையாய் கணவனுக்கு கடமையாய் கானப்பட்ட மடமை யவள்... புடம் போடாத தங்கம் குடம் தூக்கும் அங்கம் அவளது வாழ்வில் ஓர் பங்கம் மதி மயங்கா மாது விதிக்கு இணை யாது! பசிக்கு அஞ்சா நெஞ்சு சின்ன வயிறு பழிக்கு அஞ்சிய பிஞ்சு பெண் களிறு! தேவ லோகத்து தலைவன் காம தேகத்தில் அலைபவன் அவன் கண்டான் அகலிகைய இவன் கொண்டான் கௌதம முனி உருவம் வென்றான்- அவள் உடலேறி தின்றான் காமம் பெரு(க்)கி சென்றான் அங்கிருந்து விலகி! இது- ஏதுமறியா முனி எல்லாம் தெரிந்த சனி திரும்பி வந்தார் குளியல் பழகி! புசிக்க உணவுண்டா உடன் கொண்டா! -என வினைவயப்படி வந்தார் நின்றார் வியந்தபடி! அகல் யா அரை ம...

விதி வசம்!

விதி வசம்...! குறிஞ்சிப் பூக்கும் நெருஞ்சியும் பூக்கும்! பண்ணீரெண்டு யாண்டுக் கொருமுறை மழை கண்டமாத்திரம் மறு முறை... மலை யோரத்தில்-இது சாலை யோரத்தில் உயரத்தில் உயர்வாய் மதிக்கப்படும் உயராது கால் மிதிப்படும்! குறிஞ்சி கண்ணுக்கு விருந்தாகும் நெருஞ்சி கண்டவருக்கு (உடலுக்கு) மருந்தாகும்! இரண்டும் பூவாகும் இறைவனுக்கு ஒன்றாகும்! ரெண்டும் பூக்களே படைத்தவன் பார்வையில் வேரில்லை! நீ! குறிஞ்சியா நெருஞ்சியா... பிறவியில் (பிறக்கையில்) அறிஞ்சியா!? வித்யாசம் வீணர்க்குத்தான்... விதிக்கு அல்ல! விதிவசம் விட்டுப்பார் நீ முயற்சியை மட்டும் தொட்டுப் பார்! தேவா.

என் பாட்டி! நினைத்தேன் ஒரு வாட்டி!

கட்டு வெத்தலை ஒத்த பொம்பளை இருந்த தெம்புள... வெட்டுப் பாக்கு கெத்து காட்டும் சிறிது சீவல் தீர்ந்த ஆவல் சேர்த்த சுன்னாம்பு ... பிரியா புகையிலை பகை ஆகவில்லை போட்டு சுவைத்த வாயி அவ பல்லெல்லாம் காவி! அம்மச்சி அம்மத்தா இடிச்சு சப்பத்தா(ன்) அதைப் பாத்தா அன்று அவமானம் தெரியவில்லை அவ வெகுமானம்! பாக்கு வெத்தலை பரிசத்திற்கு மட்டுமல்ல உடற் பரி சுத்ததிற்கும் உறவு பகிரும் சத்தத்திற்கும்! வழிந்தோடும் நீர் உறிஞ்சி வாய் கிழியப் பேசி வாழ்க்கை சுத்தமாச்சு வார்த்தை சொச்சமாச்சு வலக்கை உரலிடிக்க இடக்கை அத இடுக்க இருவிரல் துடைத்தெடுக்க... துவையலாய் உள் யிறங்க மோவாய துடைச்சுகிட்டு முகட்டோரம் ஒதுக்கிட்டு வெல்லமாய் கரைய மிளகுகாரம் மெதுவேற படு மூச்சு இழப்பாக மொத்தமா போட்டுத் துப்ப... முத்தமா சிரித்திருந்தா(ள்) மனம் மொத்தம் சிவந்திருப்பா(ள்)! பல்லில்லா பருவத்திலும் பக்குவமா உருவத்திலும் பயத்தோடு பாசமும் கட்டில் கயத்தோடு வாசமும் வசித்து வந்த நேசமும் கதவோரம் வாசப்படி காலோரம் கைத் தடி இருமல் கூட செருக்கு இடுப்போரம் சுருக்கு நெல்லு வித்த சரக்கு அதில் காசாத்தான் இருக...
விசித்திரமான உலகு விந்தை யாய் பழகு(ம்)! ஆணவத்தில் ஆடி அனுபவத்தை நாடி உயிர் விட்டு ஓடும்! நடித்தால் ரசிக்கும் துடித்தால் சிரிக்கும்... பகிர்ந்தால் தவிர்க்கும் பகிராவிடில் துடிக்கும்! கேட்டால் மறுக்கும் கேளாதை கொடுக்கும் கேடில்லை எனும் போது கேட்பாரும் இங்கில்லை! கூடி மகிழ குன்றிப் போய் அகழும்! எட்டாததற்கு முயலும் கிட்டாததற்கு தவிக்கும்! முறனோடு முன் வாயில் முகமெல்லாம் பல்லாய்... மனிதன் கெட்டு போனப் பின்னே மனந் தொட்டு பார்ப்பதென்ன! மயிலுக்கு போர்வை மறந்தோமே அப்பார்வை! சேவைக்கு சோறுப் போய்-கடமைக்கும் காசுதானே! கள்ளிப் பாலை கலந்தோமே காலத்தே முன் பாலை முகம் மறந்து! வெடிச் சத்தம் வெடிக்க வைத்து கேட்காமலே சிதறினோம்... கேட்க காது யடைத்தோம்! நில்லாது ஒடினோம் ஒடியே தேடினோம் தேடியே நாடினோம் நாடி கிடைக்காது வாடினோம்... வாடி பிறர் சாடினோம்! சாடி சாவதற்கா நெஞ்சுக்கு(ழி)ள் அடைக்கி வைச்சோம்! சங்கடங்கள் நூறு சஞ்லங்கள் பலவாறு சட்டங்கள் வேறு தாண்டிச் செல்ல தூண்டிப் போட்டோம் நோண்டிப் பார்த்து வேண்டிக் கொண்டோம் வேதனைக்கு யஞ்சி வேற் பல கெஞ்சி உய...

பயந்து கிடக்கே...!

பயந்து கெடக்கே மக்கா - மனம் வியந்து கெடக்கே... மக்கா! பாவி யாகி போனோமோ நம்மில் பாதியாகி போனோமோ! கதறது இனம் பதறதே மனம் இன்னும் என்ன வாகப்போகுது இனி என்ன வாழப் போகுது! ஆற்று நீருக்கு அலரவிட்டு செரிலைட் ஆலையில் சிதறவிட்டு கெயில் திட்டத்தில் கதறவிட்டு மீத்தேன் எடுக்க மிரளவிட்டு நீயூட்டினா யெடுக்க நோண்டி கிட்டு... விவசாயம் அழியுதே விலைநிலம் காயுதே விரட்டி விட வா பார்க்க்குது நம்மை... வீணா வாங்குது வம்பை! நாம்- பார்த்து வளர்த்த நிலம் பயிராவ பார்த்தோம் இல்லை- உயிராய் அல்லவா சேர்த்தோம்! வீணர்களுக்கு வாக்களித்து வீனாகிப் போனோம்! இனியும் இதை விளையாட்டாய்ப் பார்த்து விலகி யாப் போவோம்! இங்கு ஒன்னு அங்கு ஒன்னு  - திட்டம் இதி தானா நடக்குதா இல்லை ஒன்னா சேர்த்து வைச்சு சமைக்குதா... சாகர் மாலா வேற மசாலாப் போல சேர இது விரட்டி யடிக்கவா-நம்மை துரத்தி யடிக்கவா! படிப்பு போச்சு மாணவன் செத்தான் மீன் வளம்போச்சு மீனவன் செத்தான் விலை நிலம் போய் வாரத நீருக்கு விவசாயி செத்தான்... மிச்சமிருக்கும் தொழிழும் சொச்ச மிருக்கிற நாமளும் என்ன செய்யப் போ...

காமம் எனக்குள்...!

காதல் சொன்ன உத்தியில் காமம் எனக்கு மத்தியில் - அல்ல புத்தியில்! அதனால்- புருவத்தி லேற்றி புழுங்க விடுவதில்லை! இருந்தும் சில நேரங்களில் மாற்றுத் திறனாளியாய் தவிப்ப துண்டு... தடுப்பது முண்டு! மனசறியும் மாண்பு மரணித்து அழியுமா மறந்தால் ஒழியுமா! வழி யெதுவே வாழ்வது... பாதை கேற்ப பயணமா பயணத்திற் கேற்ப பாதையா! கண் டொழிக்க மேதையில்லை -இது கழன்று யகலும் போதை! தேவைக்கு இருந்தும் தேவையாய் மருந்தும் தேடும் விருந்தும்... இருந்து விட்டு போகட்டும்! இல்லாமலே போனால் இயல்பாக முடியுமா!? இயற்கைக்கு எதிர் புரிந்தும் அது - புதிர்! கிளர்ந் தெழும் மனம் களத்தில் இல்லை ஆனால்- காரியம் செய்யும்! தவிக்குது நெஞ்சம் தவிர் த்தது கொஞ்சம் தடைக்கு மிஞ்சும் விடைக்கு அஞ்சும்... சொல்லும் செயலும் வேறாகி உணர்வுக்கு ஊற்றே பழியாகி உணர்தலை அதற்கு வழியாகி ஊருக்குள் அதை மொழியாக்கி உத்தமனாய் காட்டும் உத்வேகம்... மனப் போர்வை நீக்கி பார்த்தால் உள்மனம் கண்சிமிட்டும்! நல்லவனாய் இருப்பதும் - ஏதும் நடவாது இருப்பதாலே! என்னசெய்வது உன் கஷ்டகாலம் இதை கடந்தாக வேண்டும்! தேவா.
யேசு அல்லா இறைவா! பேசு நல்லா நிறைவா! காதல் இன்பம்-என்ன உறவா... காசு பணம்-மட்டும் குறைவா! ஆசை அன்புத் தரவா... மனிதம் புனிதம் உயர்வா! மாற்றம் வரும் விரைவா... காத்து பாத்திருந்தோம் மறைவா! வேண்டாம் ஒதுக்க துறவா... திருந்த மாட்டோம் தலைவா! மரணம் நிச்சயம் மறவா! தேவா.
வாழை இலைச் சோறு... வசதி யில்லை (வாய்க்க வில்லை) பாரு! நெழித் தாள் ஒழிக்க நிசமாத்தான் நினைக்குது மனம்... பசி(டி)த்தவனுக்கு-பசி வந்தால் பட்டுன்னு தான் மறக்குது தினம்! தேவா.

கல்வி கடனாய்....வேண்டாமே!

மனதார வேண்டுகிறேன்... மனங் கொள்ள வேண்டுகிறேன்! நண்பர்களே நல்லதை பகிர்வோம் அப்படி யே நம்பிக்கை யையும்! கல்வியாண்டு முடிந்தது-அடுத்த கல்வி யாண்டு தொடக்கம்! அதிலே- நம் பொளைப்பும் பொருளும் அடக்கம்! போதிக்க போகுமிடத்தில் பாதிக்கப் படுவது நாம் தானே! ஆசை வுண்டு ஆளுக் கொன்றாய்... அடித்தளம்  வேண்டும் அதற்கு நன்றாய்! ஆரம்ப கல்வி யாகட்டும் ஆர்வ கல்வி யாகட்டும் இனி- அரசு பள்ளிகளில் ஆர்வம் காட்டுவோம்! தனியார் பள்ளி களை தயவு செய்து ஓரங்கட்டி ஒதுக்கவோம் அல்லது ஒதுங்குவோம்! நம் பொருள் ஈட்டலில் பெரும்பாலும் பொசுங்கி போவது இவ்விடந்தான்! பணத்தோடு பயனையும் இழக்கிறோம்! தனியார் பள்ளி யை தவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து-ஆவணஞ் செய்வோம்! தரத்திற்கு- கேள்வி வரலாம் தரம் உயர்த்துவோம் தனியே பயிற்சி வூட்டுவோம்... தர மென்ற பெயரில் பணத் தகுதி இழந்தது தான் மிச்சம்! சர்க்கரை பாகாய் பிள்ளைகள் அக்கறை கொள்ளுவோம் இல்லை- திரிந்து விடும்-பணத்தால் நம்(ன்)மை பிரிந்து விடும்! வளர்ச்சி வகுக்கப்பட வேண்டும் மலர்ச்சி காணப்பட... அயர்ச்சி ஒன்று மில்லை அசராதீர்! தீர...
கட்டிய மணைவி கடவுள் யென்றால் கண் கலங்கி-போனேன் நின்றேன்! அத்தமிழ் கண்டு... நான் கடவுள் - இல்லை அது- நா கட உள்! ஆண்டவன் இல்லை அடிமை யென...! தேவா.
உயிருக்கு உயிராய் உறவுக்கு உறவாய் இருக்கத் தான் ஆசை... மீண்டும் பிறக்கத் தான் ஆசை! அன்புக்கு அன்பாய் ஆனப் பின்னும் அறிவில் ஆறை கண்ட பின்னும்(போதும்) வாயும் வயிறும் மட்டுமல்ல... மனமும் வேறுதானே! பிறப் பறுக்கும் வேதனை தானே! தேவா.

மதம் மாறாதீர்... மறுக்காதீர!

இங்கே(யே) இருப்பிர் பிற- மதம் பறப்ப... மாமதம் ம(றை)றுக்க மாற்றானாய் யிருக்க வெட்கமாய் யிவ்லையா நீ! இங்கு பிறக்க... பிறப்பிடம் மறந்து மனிதம் துறந்து மதம் பரப்பினால் உனை போற்றுவதற் கில்லே! போகட்டும் பிழைத்துப் போ... உனைத் தூற்றாது துரத்தாது விட்டதின் மாண்பு! இவ்விளைவு... பின்விளை வெண்ணி நாங்கள் பிரித்து ஆள்வதில்லை பிரித் தாள்வோரை ஒருபோதும் பொறுத் தாளமாட்டோம்! மதம் மனிதம் இரண்டும் எங்க(ள்) மரபு! பெருஞ்செல்லவந் தேட பேராசைக் கூட வரலாறு மறைத்து வாதாட மறுத்து விசுவாசம் பாட கூசாது பேச கூட்டாதே பொய்... சம்மா குரைக்காதே ஓய்! நீ! உச்சியில் இருப்பது தமிழ் உச்சரிப்பால்... உபசரிப்பு-எங்கள் தனிச் சிறப்பு! கைகூப்பி கேட்கிறேன் இங்கு- களவாடிச் சென்றவனுக்கும் உறவாடிக் கொன்றவனுக்கும்... உனக்கும்! என்ன வித்யாசம் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்... என் வீட்டு கூறே யேறி என் வீட்டேப் பற்றி பேச - இது யார் கொடுத்த உரிமம் இதென்ன தர்மம்! தாய்ப்பால் தரங்கெடாது தரித்திரமே எம் தாயகம் என் தமிழினம்-உனை மன்னித்து விடாது! தேவா.

மறந்தே போனது...!

மறந்தே போனது! மாடு கட்டி போர் அடித்தால் மாளாது-என யானைக் கட்டிப் போர் அடித்த-எங்கள் மறவர் கூட்டம்!-அது மறந்தே போனது! மூன்று போக விளைச்சல் கண்ட வீர மாயி-இன்று ஒரு போக விளைச்சலுக்கு வழி யில்லை எலிக்கறி இங்கே உணவாக-வேளாலர் கூட்டம்! நித்தம் பயிரிட்டு தத்தம் போரிட்டு... பாவத்திற்கு போராட்டம் ரோட்டு மேலே-கூட்டத்தோடு! அது- மறந்தே போனது... வாகனத்தில் போக வசதி யில்லை பெட்ரோல் விலை மலை யானதே(ன்)?! பஸ்சில் பயணம் மாணவர் கூட்டம்! பஸ்சில் போக பயம் பயணத்தை தள்ளிப் போட்டது-மக்கள் கூட்டம்! -அது மறந்தே போனது... அரசியல் வியபாரம் அசிங்க வாதிகள் ஏராளம் ஆட்சியில்  பங்கு அநிஞாயம் எங்கும் ஊழலில் பேரம் திட்டத்தில் லாபம் பணியில் முடக்கம் எல்லாம் பதவில் அடக்கம் மக்கள் நலனில்லை இங்கு! மறந்தே போனது-இது மக்களாட்சி! ஞாபகபடுத்திக் கொள் நினைவுபடுத்திக் கொள் நிலைநிறுத்திக் கொள்! உனை திருத்திக் கொள் திருந்த வழிச் சொல் திருப்பி வலிக்கச் சொல்... ஏன்யெனில்-இது மக்களாட்சி! ஆம் நாம் மக்கள்! அவ்வப்போது-அது மறந்தே போனது...! தேவா.

காலம் ஒன்றே...காதல் நன்றே!

காலம் ஒன்றே...! ஆரம்பத்தில் ஆதாயம் ஆபத்து! அடுத்தடுத்து அதிகரிப்பு ஆணந்தம்... பேராசை வெறுத்தால் நிராசை பொறுத்தால் வருத்தமே இல்லை! வருத்தமே-இழப்பு இழப்பதற்கு - என்ன கொண்டு வந்தோம்! இறப்புக்கு முன்னேதான் இழப்பு பெரிது... பின் காண்பது யார் அறிவார் யாரும் அறியார்! லாபம் ஒன்றே வாழ்க்கை! - எது லாபம்?! சேமிப்பு சேர்த்தல் சேமியுங்கள் அன்பை அறத்தை நல் சுகத்தை சேருங்கள் உடலுக்கு நல் உணவை உடனுக்கு நல்லுறவை நட்பை... நட்டமாய் தவிருங்கள் வெறுப்பை! அன்பு ஒன்றே ஆயுதம் அனைத்திற்கும் அதில்- அறம் என்றும் இல்லையெனில் வெறும் காகிதம்! பார்வைக்கு பாஷை தெரியாது பாசத்திற்கு பார்வை அறியாது சொல் விழுந்தால் மீண்டும் வாரது புத்திக்கு புலனாய்வு புரியாது... ஏதும் கட்டாயம் கிடையாது! நேற்று!  இருந்தது... உண்மை- நினைவு சொன்னது இன்று!  இருப்பது(ம்) உண்மை- நிகழ்வு சொன்னது! ஆனால்- நாளை என்பது வெறும் நம்பிக்கை பெரும் எண்ணிக்கை... காலம் தன் கடமையைச் செய்யும்! காலத்துடன் காதல் செய்வீர்... சாதல் வரை! சாதல் இனிது அதற்கு(ம்) முன் சாதித்தல் எளிது! காலம்...
பச்சை மரமே பசுமை நிறமே! உன்-உச்சம் எதுவரை வானந் தேடும் அது வரை! எனக்கு பிடித்த விசயங்கள் பல உண்டு.. நீ! வேர் பிடித்து நினறது அதிலொன்று! நான் பிரமித்தவை பலவுண்டு - நீ கிளைப் பரப்பி நிலங் காத்தாய்... இலை சேர்த்தே நிழல் பார்த்தாய் அது வொன்று! மண் நீர் உறிஞ்சி வேர்த்தாய் வான் நீர் வாங்கி மண்ணில்  தேங்(க்)கி மறுபடியும் வளர்ந்தாய் ஓங்கி...! ஒரு காரணமுமின்றி காரியம் செய்தாய்! கருமேகம் சூழ்வுறச் செய்தாய்... சூரிய ஒளியின் வலி குறையச் செய்தாய்! சோதனையின் போதும் வேதனையின் போதும் சோராக்க காசாய் நின்றாய்! உண்மை க்கு மட்டுமல்ல உருப்படியாய்  ஏதாவது செய்யாவிட்டாலும் உன்னையே உவமையாய் உருவாக்கினாய்... எம்மை சிலநேரம் ஊமை யாக்கினாய்! பெருமை கொண்டோம் உன் மீது பொறாமை கொண்டோம்... உன் போல்-உலகத்திற்கு பயன் இல்லை யென்று! அருமை உணர்தோம் அதன் பால்-அன்பு கொண்டோம்! ஆகையால் அருகில் கண்டோம் - என் வீட்டில் என்றும் நீ! உன் நிழலில் நான்! நான் இருக்கும் வரை நீ இருப்பாய்! இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்தால் எங்கும் இருப்பாய் உயிர் செழிப்பாய்! ப...

முதல் நாள்...

சித்திரைத் திங்கள் சிரித்திடுங்கள்... நீங்கள்! சிந்தியுங்கள் சினந் தவிர்த்து! சிறக்கச் செய்யுங்கள் மனம் உரக்கச் சொல்லுங்கள்!! வெல்லுங்கள் காலத்தை(தே) கவர்ந்து கொள்ளுங்கள்! நிமிர்ந்தே நில்லுங்கள்... நேர்பட நேசியுங்கள்! இன்பம் இதுவென்று அள வுண்டோ இயல்பாய் ஏற்க தடை வுண்டோ! பணத் தீயின் மகிமை மனந் தன்னை-மனிதனை எரிக்கும்! பக்குவமாய் பார்த்தால் பல்லாண்டு சிறக்கும்! வேண்டுதல் தேட வேண்டியவை நாட பிராத்தியுங்கள்... கிடைத்தால் பக்கபலம் கிடைக்காது போனால் பலமான பக்குவம்! நிம்மதி எங்குண்டு வெண்மதிப் போல் நம்மில் கண்டு(உண்டு) வெளிப் பார்வை வேசம் வேண்டாம் சுயப் பார்வை சொர்க்கம் சேர்க்கும்! எல்லாமே நம்முள் இருக்க... நாம் மட்டும் ஏன் இரண்டாக! (இருக்கோம்) சுகமென்று எதுவெனில் தேக நலந்தான் அதென்பேன்! நாளும் மாறும் கோளும் மாறும் நாமும் மாறினால் நல்லது மாறுமா! நன்றி யென்பது நம்பிக்கை தருவது... படைத்தவன் இருக்க படைத்ததும் இருக்க பாழாக்கிப் போகலாமா.. ஏதெனும் புதியவை படைக்காமல் போகலாமா! பிறந்த பலன் திறந்து பாரும்... வருந்தாமல் இருந்தாலே வாழ்வில்(...

நன்றி தம்பு! நன்று சிம்பு!

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்... இது பழமொழி! நிரந்தரமாக பழகும் வழி தரவைப்போம் தளரவைப்போம்-என தரந் தாழ்ந்த அரசியல் அசிங்கத்திடம் இனி கோர்வதைவிட... தரமாட்டோம் மனந் தளரமாட்டோம் என சொல்பவரிடம் மன்றாடலாம்! மானசீகமாக வேண்டலாம்! போராடினால் வாரியம் அமையும்... பெற வேண்டினால் காரியம் பலிக்கும்! தேவை யறிந்து தேடல் பார்வை... தேடல் தொடங்க தேசியப் பார்வை! தமிழர் கன்னட ரென பிரிந்தா விட்டோம்! நாம் திராவிட ரென மறந்தா விட்டோம்! தேவைக்கு நீயும் தேக்கி வை எம் தேவை யை-நீயும் போக்கி வை! இனி வொரு முறை பிறவோமா... இந்த நீரால் நீயும் நானும் பிரிவோமா! பகிர்ந்தளித்து வாழுவோமே பசியாற ஒன்றாய் சேருவோமே! நீருக்கு சாதியில்லை பயிருக்கு பேதமில்லை உயிருக்கு மதமில்லை ஊருக்கும் விவசாயத்திற்கு(ம்) ஏதுமில்லை... அங்கும் இங்கும் எங்கும் ஒன்றே! நீரின்றி அமையாது அதை நீ(ர்) தடுத்தால் பிழைக்க வழி யேது! வளர்ப்போமே நேசம் வளரட்டும் நம் தேசம் நீ(ர்) பகிர்ந்தால் என்ன மோசம்... இனி பழகுவோம் பகிர்ந்து-,அதுதான் பாசம்! பிரிவினைக்கு முற்றுப்புள்ள...

கேளடி கிளியே...!

கேளடி கிளியே! ஆளாய்ப் பறந்து ஆவதென்ன கிளியே! ஆண்டவனும் மாண்டான் அப்புறம் எங்கே மீண்டான்! ஆணவம் அடங்கவில்லை யே ஆதங்க மானதடி கிளியே! கண்ணால் கண்டும் காதால் கேட்டும் தீர ஆராய்ந்தும்-தெரிந்தும் தெரியாது போனதடி கிளியே! வந்தவர் போவார் போனவர் வாரார்... வாடிக்கை தானடி கிளியே! ஆறடி நிலமாவாது சொந்தம்-முன்னே இப்ப அது(க்கு)கூட அறுகதை இல்லையடி கிளியே! அரை மணிநேர வேலை அரைப் படிச் சாம்பல் மின் மயானத்தில் மிச்ச(மாய்)மிருப்பதடி களியே! வேலைக்கு சோறு கண்டு சோறுக்கு வழி கண்டு சேர்த்து வைச்சாலும் கிளியே! அவன் நோவாது இருந்தாலும் சாவாது இருக்கப் போவதில்லை கிளியே! கட்டுக் கட்டாய் கரன்சியும் கட்டி கட்டியாய் கனகமும் காப்பாத்தி வைச்சானடி கிளியே! உறவோடு போகும் இல்லை இரவோடு போகும்-அவன் இழவோடு போகுமாடி கிளியே! நாடாண்ட மன்னனும் நாடோடி மக்களும் ஞாபக மில்லையடி கிளியே! தானறிந்த சித்தரும் ஞானம் சொன்ன புத்தரும்... இங்கு நிலைக்கவில்லை கிளியே! அதை நினைப்பது மில்லை கிளியே! ஆயிரந்தான் சொன்னாலும் வருத்தமது தந்தாலும் உருத்தவா போகுதடி கிளியே! இவர் அனுபவிக்க சுகமுண்டு அத்த...

சம்மர்-ஐ சமாளி

வெயில் காலம் வந்துவிட்டது வேர்க்குது வெம்பி... உள்ளுர் பானமெல்லாம் தந்துவிட்டது உன்னையே நம்பி! அருந்திப் பாரீர் ஆதரவு தாரீர் அருகதை யற்ற அந்நிய பானம் அரவே தவிர்த்து அருந்துவோம்-நம் மண்ணின் பானம்! காப்போம்-நம்(அம்) மக்களின் மானம்! பனை யோலை யேந்தி பதநீர் யருந்தி நுங்கு நோண்டி ஞளிர்ச்சி வேண்டி... பனைப் பொருட்களை பயன்படுத்தவோம் வெள்ளரி பிஞ்சு அதிலேது நஞ்சு... தர்பூசணியும் தாராது ஒர் சளியும்! கரும்புச் சார்-அருந்தி விவசாய கஷ்டம் பார்! நன்னாரி சர்பத்தும் நான் யறிந்த அற்புதமும்... எலுமிச்சை சாரு அதன் லெவல் வேறு! இஞ்சி மா உப்பு-சேர்த்த மோருக்கு மிஞ்சி வேறேது(ம்) எஞ்சி! மண்பானை நீரும் மனசெல்லாம் குளிரும்! மதிய வெயில் மண்டைய பிளக்கும் கெண்டையை இழுக்கும்... மயங்கிடாதே மறந்து விடாதே நீர் பருக! சீரக நீரும் சிறுவெங்காயம் சிறுதானிய கூழும் சிறுநீரக த்திற்கு சீராய் சேரும்! அகத்திக் கீரை அனல் குறைக்கும் மனத்தக்காளி வாய் வயிறு மனங் குளிருட்டும்! கற்றாழை சதை காரியம் செய்யும் வெந்தயம் உடற் சூட்டைக் குறைக்கும்! சத்தானது இங்குண்டு அந்நிய மோகத்தி...
ஒர் அவசரத் தேவை அது அவசியம் தேவை! நம் நாடு நம்மினம் நம் பிரச்சினை... நாமே காப்போம் நாட்டிற்கு நன்மை சேர்ப்போம்! காவிரி வெறும் உரிமை பிரச்சினை மட்டுமல்ல... நம்முயிர் பிரச்சினை வருங்கால வாரிசுகளின் வாழ்வாதாரப் பிரச்சனை... உரிமை மட்டுமே பெற்று உயர்வ தெப்படி? உரிமை வரட்டும் மெதுவாக(ய்)! அதற்கு முன் தடுப்பணை பல செய்வோம் ! நீர் தேக்த நம்முயிர் காக்க உயிரான இனம் காக்க! ஒற்றை தலைவனை உற்றத் தலைவனாக தேர்ந்தெடுத்து... பொறுப்பாளர்கள் பல பொறியாளர்கள் சில(ர்) பொருத்தமா திட்டம் வகுப்போம்! திடமாய் அதை கட்ட வைப்போம்! அரசியல் தேவையில்லை அரசு தேவை இல்லை ஆணை மட்டும் தரட்டும்... தடை யில்லாமல். நிதிக்கு எங்கே போவது நிதர்சனமான யோசனை திட்டம் நிறைவேற ஆண்டுகள் ஆகலாம் ஆகட்டும்! மாதம் ஒருநாள் ஊதியம் ஒரு ஞாயிறு ஊழியம் கொடையாய் கொடுப்போம் அனைவரிடமும் கேட்போம்! இருப்பவர் அள்ளிக்கொடுக்கட்டும் இல்லாதவர் கிள்ளிக்கொடுக்கட்டும் இது பிச்சை யல்ல பச்சை வளம் காக்க நம் இச்சை... நம்மால் முடியாதது ஏதுமில்லை! முயலாமலே சொன்னால் இயலாது தான்! பூணைக்கு யார் மணி கட்டுவது நான...
அக்க்ஷய திதி! இன்று அக்கறை யே விதி அது நன்று! நீர் சேமி - அதில் அக்கறை காமி! சொம்பு நீர் படைத்து வேண்டுவோம் நீர் நிறைப் பெற்று இவ்வாண்டு தாண்டுவோம்! காவிரி நீடுழி கால் பதிக்க வா! நீர் கஷ்டம் தீர்க்க வா... ஏழு கோடி மன(ம்) வேண்டுதல் ஏற்கு மோ - இந் நல வேண்டுதல்... உணர்வே உயர்வு நல் நினைப்பே நிம்மதி! அக்க்ஷய திதி இன்று-நம் அக்கறை யே விதி... தேவா.